அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவருக்கு மியன்மார் இராணுவ நீதிமன்றம் 11 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

37 வயதான அமெரிக்கப் பத்திரிகையாளர் டன்னி ஃபின்ஸ்டர், மியன்மாரில் இராணுவப் புரட்சியை விமர்சித்த இணையத்தளத்தில் பணியாற்றினார்.
குடியேற்ற சட்டங்களை மீறியதாகவும், தவறான நடத்தை மற்றும் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் பேசியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
