ஜிஎஸ்பி பிளஸ்

ஜிஎஸ்பி பிளஸ்

இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்படும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை 2027 டிசம்பர் 31 வரை மேலும் 04 ஆண்டுகளுக்கு நீடிக்க ஐரோப்பிய ஆணைக்குழு இன்று (19) தீர்மானித்துள்ளது.

 

இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் இந்த வரிச் சலுகை முடிவடைய இருந்தது.

 

புதிய ஜிஎஸ்பி பிளஸ் முறைமை தொடர்பான கலந்துரையாடல்கள் தொடரும் அதேவேளையில் இலங்கை போன்ற நாடுகள் முன்னுரிமை வரிச் சலுகைகளை இழக்காது என ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

இதேவேளை, 2022 ஆம் ஆண்டில் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 3.2 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான ஏற்றுமதிகளை செய்துள்ளதாக இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்பி பிளஸ்  வரிச்சலுகைக்காக விண்ணப்பிக்கும் இலங்கை !

2024 -34 காலப்பகுதிக்கான ஜிஎஸ்பி பிளஸ்  வரிச்சலுகைக்காக இலங்கை விண்ணப்பிக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்பி வரிச்சலுகைக்கான விண்ணபிப்பதற்கான அனுமதியை கோரும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு செயற்பாடுகள் சேவைப்பிரிவின் ஆசியா பசுபிக்கின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் பவோலா பம்பலோனியுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்த கரிசனைகள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

பிளஸ்  வரிச்சலுகைக்காக இலங்கை விண்ணப்பிக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்பி வரிச்சலுகைக்கான விண்ணபிப்பதற்கான அனுமதியை கோரும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு செயற்பாடுகள் சேவைப்பிரிவின் ஆசியா பசுபிக்கின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் பவோலா பம்பலோனியுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்த கரிசனைகள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்