குப்பைத் தொட்டிகளில் கிடக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் !
கடந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு அரசாங்கங்களால் நியமிக்கப்பட்ட சுமார் இருபது ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் இன்னும் செயல்படுத்தப்படாமல் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதாக பேராசிரியர் மற்றும் வழக்கறிஞர் பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மஹாநாம ஹேவா மேலும் கருத்து தெரிவிக்கையில், உதுலகம ஆணைக்குழு அறிக்கை, மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு அறிக்கை, லலித் அதுலத்முதலி கொலை ஆணைக்குழு அறிக்கை, விஜய குமாரதுங்க கொலை ஆணைக்குழு அறிக்கை, மற்றும் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ கொலை ஆணைக்குழு அறிக்கை ஆகியவை செயல்படுத்தப்படாத சில அறிக்கைகள் ஆகும். போதுமான ஆதாரங்கள் இருந்தால், இந்தக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த முடியும் என்றும் கூறினார்.
