ஜனாதிபதி அனுர

ஜனாதிபதி அனுர

தமிழ் கட்சிகள் எதிர்க்கட்சிகள் கதறுகின்றன ! தேர்தல் ஆணைக்குழு திணறுகிறது ! என்பிபி உள்ளுராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீட்டு வாய்ப்பு அதிகம் ! ஜனாதிபதி அனுர

தமிழ் கட்சிகள் எதிர்க்கட்சிகள் கதறுகின்றன ! தேர்தல் ஆணைக்குழு திணறுகிறது ! என்பிபி உள்ளுராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீட்டு வாய்ப்பு அதிகம் ! ஜனாதிபதி அனுர

யாழில், மன்னாரில் ஏப்ரல் 17, நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட உரை அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் ஊழலற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் ஆனால் மற்றைய கட்சிகள் ஆட்சி அமைக்கும் சபைகளுக்கு அவர்கள் ஊழல் செய்ய மாட்டார்கள் என்பதை ஒன்றுக்கு பத்துதடவை யோசித்துத்தான் நிதியை ஒதுக்குவோம் என ஜனாதிபதி குறிப்பிட்டார். இதே கருத்துப்பட நாட்டின் பல பாகங்களிலும் துண்டுப் பிரசுரங்களும் வெளியிடப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது.

மன்னாரில் ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்க உள்ளுராட்சி சபைகளுக்கான நிதி ஒதுக்கீடு பற்றிக் குறிப்பிட்டது தமிழ் தேசியக் கட்சிகளைக் கதறவிட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இது மக்களை அச்சுறுத்தும் முயற்சி என்றும், தேர்தல் விதிமீறலாகும் என்றும் தெரிவித்தார். அத்துடன், தேர்தல்கள் ஆணைக்குழு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தமிழ் மக்கள் ஜனாதிபதி உரையின் பின்னணியை புரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதே கருத்தை வெளியிட்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் எம் ஏ சுமந்திரன், ‘மக்களுக்கு லஞ்சம் கொடுத்து வாக்குத் திரட்டும் சமயோசித பாணியே இந்த உரை. இதற்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோருவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

பா உ சிறிதரன் ஜனாதிபதி அவ்வாறு செய்தால் தனிநாடு தமிழீழம் கோருவோம் என உசுப்பியுள்ளார். ‘வடக்கு, கிழக்கு மாகாணங்களின் உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ் அரசுக் கட்சி உட்பட தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள்தான் ஆட்சியமைக்கும். இங்குள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை வழங்க முடியாது என அரசாங்கம் கூறுமேயானால் எமக்கான தனிநாட்டை பிரித்துத் தருவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடின் அதனை முன்னிறுத்தி நாம் பொதுஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கு தயாராவோம்’ – இவ்வாறு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ். பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பா உ சிறிதரனின் இந்த உசுப்பல் பேச்சுக்களுக்கு மக்கள் மசியவில்லை. அதனால் பொதுவேட்பாளர் அரயநேந்திரன் மண் கவ்வியமை தெரிந்ததே.

இந்த விடயம தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினரும் குற்றம்சாடியுள்ளனர். தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாத உள்ளுராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கப்படாது என ஜனாதிபதி குறிப்பிடுவது ஒழுக்கத்துக்கு முரணானதாகும். இது தொடர்பில் செய்திகளை வெளியிடும் ஊடகங்களையும் ஜனாதிபதி அச்சுறுத்துகின்றார். ஜனாதிபதியால் தெரிவிக்கப்படும் இந்த கருத்துக்கள் முற்றுமுழுதாக தேர்தல் சட்டத்துக்கு முரணானதாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வருண தீப்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதேவேளை, மன்னாரில் தேர்தல் பிரசாரத்தின்போது உள்ளுராட்சிமன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட கருத்து தேர்தல் விதிமீறல் எனக் குறிப்பிட்டுத் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், இவ்விடயம் தொடர்பில் ஏப்ரல் 21 அன்று ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சமூக அரசியல் செயற்பாட்டாளர் மயில்வாகனம் சூரயசேகரம், இவ்விடயத்தை ஜனாதிபதி அனுர வேறு விதமாகத் தெரிவித்து இருக்கலாம் என்றும் ஆனால் ஏனைய கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சபைகளுக்கு நிதியைக் கொடுக்காமல் இருக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டினார்.