ஜனாதிபதிகள் வெளிநாட்டு பயணம்

ஜனாதிபதிகள் வெளிநாட்டு பயணம்

வெளிநாட்டுப்பயணங்களும் அரசியல் இலஞ்சமாக இருந்தன  !

வெளிநாட்டுப்பயணங்களும் அரசியல் இலஞ்சமாக இருந்தன !

 

ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிட்ட தொகையை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் நேற்று வெளியிட்டார்.

இதன்படி, 2010 -2014 வரையான காலப்பகுதியில் மஹிந்த ராஜபச்ச 3,572 மில்லியன் ரூபாவும், 2015-2019 வரையான காலப்பகுதியில் மைத்திரிபால சிறிசேன 384 மில்லியன் ரூபாவும், 2020-2022 வரையான காலப்பகுதியில் கோட்டபய ராஜபக்ச 126 மில்லியன் ரூபாவும், 2023-2024 வரையான காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்க 533 மில்லியன் ரூபாவும் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

2024.09.21 முதல் 2025 பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 1.8 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது எனவும் மக்களுக்கு சுமையாக இருக்காமல், செலவுகளை இயலுமான வகையில் குறைத்துக் கொண்டுள்ளோம் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுள்ள 33 பயணங்களில் எதிர்க்கட்சியினர் உட்பட மொத்தமாக 154 பேர் பங்குப்பற்றியுள்ளனர் எனத் தெரிவித்துள்ள பிரதமர் இதுவும் அரசியல் இலஞ்சம் எனவும் சிறப்புரிமைகள் முறைகேடான வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அனுரவில் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுகள் யதார்த்தத்துக்கு புறம்பானவை என பாராளுமன்ற உறுப்பினர் டிலித் ஜெயவீர தெரிவித்துள்ளார். வெறும் 1.8 மில்லியன் ரூபாயில் மூன்று நாடுகளுக்கு எவ்வாறு ஜனாதிபதியால் பயணம் செய்ய முடிந்தது என்றும் மிதிபலகையில் நின்று பயணம் செய்தாலும் இவ்வளவு குறைந்த தொகையுடன் மூன்று நாடுகளுக்கு அவர் எப்படி பயணம் செய்தார் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.