சுவஸ்திகா அருளிங்கம்

சுவஸ்திகா அருளிங்கம்

எம்.பி அரச்சுனாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை – அமைச்சர் நலிந்த ! பம்முகிறார் அர்ச்சுனா !

எம்.பி அரச்சுனாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை – அமைச்சர் நலிந்த ! பம்முகிறார் அர்ச்சுனா !

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சபாநாயகர் சில நடவடிக்கை எடுப்பார் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, சமீபத்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது மனித உரிமைகள் வழக்கறிஞர் ஸ்வஸ்திகா அருள்லிங்கத்திற்கு எதிராக பாலியல் ரீதியான இழிவான கருத்தை வெளியிட்டதற்காக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என கூறியுள்ளார்.

எனினும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தான் அப்படி கூறவில்லை என மறுத்து வருகின்றார். பெண்ணியவாதியும் மனித உரிமைவாதியுமான சட்டத்தரணி சுவாஸ்திகா அருணலிங்கத்தை அரசியல் விபச்சாரி, பல ஆண்களோடு திரிகிறார், விபச்சாரி என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிந்த அவர் தற்போது பம்முகின்றார். எம்பி அர்ச்சுனா சட்டத்தரணி ஸ்வதிகாவை “அரசியல் விபச்சாரி” என பாலியல் ரீதியாக பாராளுமன்றத்தில் சொல்லவில்லை என்று மழுப்பல் கதை சொல்கின்றார். தனது முகநூலில் வசை பாடியதை நாசுக்காக மறைக்கின்றார்.

கடந்த பாராளுமன்ற அமர்வில் வட்டக்கச்சியை சேர்ந்த இளம்பெண் “ சாளினியையே” எம்பி அர்ச்சனா விபச்சாரம் செய்கிறார் என ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த விடயம் தொடர்பில் எம்பி அர்ச்சுனா மீது சபாநாயகர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சாளினியின் பெயர் ஹன்சாட்டிலிருந்து நீக்கப்பட வேண்டும் எனப் பெண்ணிய வாதிகள் கோரி வருகின்றனர்.

பா உ அர்ச்சுனாவின் இழிவான நடத்தைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட முத்த தமிழ் பத்திரிகையாளரான முன்னாள் தினக்குரல் ஆசிரியர் வீரகத்த தனபாலசிங்கம் லண்டன் ஊடகவியலாளர் எம்என்எம் அனஸ்க்கு வழங்கிய நேர்காணலில் பா உ அர்ச்சுனாவை கண்டித்துள்ளதுடன் இவர் உள்ளுராட்சித் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும் எதிர்வு கூறியுள்ளார்.