சிவகார்த்திகேயன் – இலங்கை

சிவகார்த்திகேயன் – இலங்கை

யாழ் நூலக எரிப்பு – தமிழக ஹிந்தி மொழித் திணிப்புடன் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் காட்சியாகிறது !

யாழ் நூலக எரிப்பு – தமிழக ஹிந்தி மொழித் திணிப்புடன் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் காட்சியாகிறது !

 

தென்னிந்திய நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி இருவரும் இலங்கையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தியாவில் தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்கள் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். மும்மொழிக் கொள்கையை மறைமுக இந்தித் திணிப்பாக கருதும் தமிழ்நாட்டு மக்கள் அதனை கடுமையாக எதிர்க்கின்றனர். அந்தவகையில் மொழித் திணிப்பை எதிர்க்கும் கதைக்களத்தைக் கொண்ட பராசக்தி படம் இலங்கையிலும் படமாக்கப்படவுள்ளது.

‘சூரரைப் போற்று’ என்ற தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய பெண் இயக்குநர் சுதா கொங்கரா ‘பராசக்தி’ திரைப் படத்தையும் இயக்குகிறார்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் இடம்பெறவுள்ளது. இதில் யாழ் நூலக எரிப்பை மையப்படுத்திய காட்சிகளும் படத்தில் இடம்பெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.