சிறி பவானந்தராஜா

சிறி பவானந்தராஜா

யாழில் போதைப் பொருளுக்கு எதிரான புனர்வாழ்வு மையம் அமைக்கப்பட வேண்டும் ! பா உ சிறிபவானந்தராஜா

யாழில் போதைப் பொருளுக்கு எதிரான புனர்வாழ்வு மையம் அமைக்கப்பட வேண்டும் ! பா உ சிறிபவானந்தராஜா

 

யாழ் மாவட்டத்தில் போதைப் பொருட்களின் பாவனை அதிகரித்துள்ளதை நீதி அமைச்சு முப்படைகளின் துணையோடு கட்டுப்படுத்த வேண்டும். போதைவஸ்தால் பெருமளவு யாழ் மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால் யாழில் போதைப்பொருளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு முகாம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என இன்று நடைபெற்ற குழநிலை விவாதத்தில் யாழ் மாவட்ட பா உ சிறி பவானந்தராஜா நீதி அமைச்சரைக் கேட்டுக்கொண்டார். அவர் பேசிக்கொண்டிருக்கின்ற போதே யாழ் சுதுமலையில் மிகப்பெரும் தொகையான போதைப்பொருள் படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை சுதந்திரமடைந்தது முதல் ஆட்சிக்கு வந்தவர்கள் நீதியின்பால் செயற்படாமல் இனவாதங்களைத் தூண்டி நாட்டில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் அழித்துள்ளனர். எங்களுடைய ஆட்சியில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும் இனிமேல் இனங்களிடேயேயான ஒற்றுமையைச் சீர்குலைக்க விடமாட்டோம் என சிறிபவானந்தராஜா தெரிவித்தார்.

அவர் தனது உரையில் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட வேண்டும், நீதிமன்றங்களில் மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும், மனிதப்புதைகுழிகள் பற்றிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், காணாமலாக்கப்பட்டவர்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் போன்ற விடயங்களையும் தனது உரையில் வலியுறுத்தினார்

அவர் மேலும் தெரிவிக்கையில் வன்முறைக்குளுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் யாழ் சிறைச்சாலையில் 200 வரையானோர் பணிக்கு தேவையான போதும் 120 வரையானோரே உள்ளனர் என்றும் இந்த வெற்றிடங்களை நிரப்புமாறும் பா சிறிபவானந்தராஜா கேட்டுக்கொண்டார். மேலும் மல்லாகம் நீதிமன்றத்துக்கு இன்னுமொரு நீதிபதியின் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.