சித்துப்பாத்தி இந்து மயானம்

சித்துப்பாத்தி இந்து மயானம்

யாழ்.செம்மணியில் எலும்புகூட்டு எச்சங்கள் மீட்பு !

யாழ்.செம்மணியில் எலும்புகூட்டு எச்சங்கள் மீட்பு !

யாழ். செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் குறித்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

அதனை அடுத்து, கட்டட வேலைகளை முன்னெடுத்த ஒப்பந்தக்காரர், அது தொடர்பில் நல்லூர் பிரதேச சபை மற்றும் மயான அபிவிருத்தி சபையினருக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில், கட்டட பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது

எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதை தொடர்ந்து, 1996ஆம் ஆண்டு சுண்டுக்குளி மாணவி கிருஷாந்தி உள்ளிட்ட 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை 1995ஆம் ஆண்டு மற்றும் 96ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட பலர் படுகொலை செய்யப்பட்டு , செம்மணி பகுதியில் உள்ள வயல்வெளிகளில் புதைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பல விடயங்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் பகுதிகள் குறித்த மயானத்தை அண்மித்த பகுதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் அன்றைய பிரதித் தலைவர் மாத்தையாவோடு கைது செய்யப்பட்ட அவருடைய விசுவாசிகள் செம்மணியில் வைத்தே படுகொலை செய்யப்பட்டதாக மாத்தையா அணியைச் சேர்ந்த ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.