‘நல்லமா நல்லமா’ – ட்ரெட்ன்டிங்கில் சாமர சம்பத்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் வைத்து, மக்களிடம் ‘நல்லமா, நல்லமா’ எனக் கூறியதை நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பாராளுமன்றத்தில் கிண்டலடித்த காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில், “நீங்கள் சம்பந்தப்பட்டுள்ள மோசடிகள் குறித்த கோப்புகள் எங்களிடம் உள்ளன, நாங்கள் அனைத்தையும் விசாரிப்போம்” என்று அமைச்சர் வித்யாரத்ன கூறினார்.
“சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நீங்களும் அரசாங்க அமைச்சர்களும் பொது நிதியை வீணடித்து முந்திரி பருப்பை சாப்பிட்டது பற்றி தான் இப்போது மக்கள் பேசுகின்றனர். நீங்கள் என் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம். நான் பயப்படவில்லை” என்று எம்.பி. சாமர சம்பத் கூறினார்.
மேலும் , வடக்கு மக்களின் நல்வாழ்வு குறித்து விசாரிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு எப்படி தைரியம் வந்தது… ?
“அரிசி இல்லை, உப்பு இல்லை, இப்படி அரசாங்கம் அடிப்படைத் தேவைகளை வழங்கத் தவறியபோது, வடக்கு மக்களிடம் எல்லாம் நன்றாக இருக்கிறதா என்று ஜனாதிபதி எப்படிக் கேட்க முடியும்..? இந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் எவ்வளவு அதிகமாகப் பேசுகிறார்களோ, அவ்வளவு அதிகமாக வாக்குகளை இழக்க நேரிடும் என்று தசநாயக்க கூறினார்.
நல்லமா நல்லமா என நளினத்துடன் சாமர சம்பத் தசநாயக்க கூறியது தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.
