சாமர சம்பத்

சாமர சம்பத்

எம்பி சாமர சம்பத் விளக்கமறியலில் ! 

எம்பி சாமர சம்பத் விளக்கமறியலில் !

மூன்று வழக்குகள் தொடர்பாக நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு, இரண்டு வழக்குகளில் பிணை கிடைக்கப்பெற்ற போதிலும், மற்றொரு வழக்கிற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதன்படி, சாமர சம்பத் தசநாயக்கவை ஏப்ரல் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊழல் குற்றச் சாட்டிலேயே சாமர கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு அரச வங்கிகளில் இருந்து

இரண்டரை மில்லியன் ரூபா நிதியை ஊவா மாகாண சபைக்காக பெற்றுக்கொண்டு அந்த நிதியை சாமர சம்பத் தசநாயக்க தனது நிதியத்தின் கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம் மற்றுமொரு வங்கியிடம் ஊவா மாகாண சபைக்காக பெறப்பட்ட ஒரு மில்லியன் ரூபாவை முதலமைச்சராக இருந்த சாமர சம்பத் தசநாயக்கவே வங்கிக்கிளையில் நேரடியாகவே பெற்றுக்கொண்டது.

மேலும் அரச வங்கியொன்றில் தனிப்பட்ட நிதியை கோரியபோது அதனை வழங்க மறுத்த வங்கி முகாமையாளருடன் முரண்பட்டுக்கொண்டு அந்த வங்கியில் ஊவா மாகாண சபை பேணி வந்த பல்வேறு நிலையான வங்கிக்கணக்குகளை நீக்கிக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 23 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலைகாரன் லவ் க்ரஷ் மெட்டீரியல் ஆக்கிவிட்டீர்கள். விசாரணை எப்போது…? பாராளுமன்றில் சாமர சம்பத் துப்பாக்கியைக் கொடுத்த பெண் இந்தியாவிலா ?

கொலைகாரன் லவ் க்ரஷ் மெட்டீரியல் ஆக்கிவிட்டீர்கள். விசாரணை எப்போது…? பாராளுமன்றில் சாமர சம்பத் துப்பாக்கியைக் கொடுத்த பெண் இந்தியாவிலா ?

ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள ஒரு குற்றவாளியை இன்று புகைப்படங்களை வெளியிட்டு வீரராக அறிமுகப்படுத்தியமை குறித்து முறையான விசாரணை வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து நாடாளுமன்றில் கேள்வி பதில் நேரத்தில் நேற்று அவர் கருத்து தெரிவிக்கையில், புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டு பிரதான சந்தேக நபரை 8 மணித்தியாலங்களில் கைது செய்தாக பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் கூறினார். பொலிஸ் திணைக்களம் 8 மணித்தியலங்களில் திறமையாக சந்தேக நபரை கைது செய்தமை தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால் மற்றைய சந்தேக நபரான பெண்ணை இதுவரை கைது செய்யவில்லை. அந்தப் பெண் நீர்கொழும்புக்கு சென்று துப்பாக்கிதாரியிடம் இருந்து பிரிந்து தனியாக சென்றுள்ளார். ஆனால் பிரதான துப்பாக்கிதாரி மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் நீங்கள் இவ்வாறு கூறினாலும் ஊடக செய்திகளில் டுபாயில் இருந்து துப்பாக்கிதாரி காட்டிக்கொடுக்கப்பட்டமையினாலேயே துப்பாக்கிதாரியை கைது செய்தாக கூறப்பட்டுள்ளது. அதன்படி இது எமது திறமையால் அன்றி டுபாயில் இருந்து பாதாள கும்பலால் காட்டிக்கொடுத்தமை ஊடாகவே அவர் கைதாகியுள்ளார். இப்படிதான் ஊடகங்கள் கூறுகின்றன.

இதேவேளை சந்தேக நபரின் படங்களை வெளியிட்டு நாட்டுக்கு வீரராக்கியுள்ளீர்கள். இவ்வாறு புகைப்படங்களை பகிர்வதற்கு இடமளிக்க வேண்டாம். அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது பாதுகாப்பு தரப்பினரை பார்த்து சிரித்து, காதல் கொள்வது போல் காணொளிகள், படங்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்கள் எவ்வாறு சமூக வலைத்தளங்களுக்கும், ஊடகங்களுக்கும் வெளியாகின என்பது தொடர்பில் விசாரணை செய்யுங்கள் என்றார் சாமர சம்பத்.

நீதிமன்றத்துக்குள் துப்பாக்கியைக் கடத்தி வந்த பெண் சில சமயங்களில் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகங்களும் தற்போது தெரிவிக்கப்படுகின்றது.

“வடக்குக்கு அள்ளிக்கொடுத்துவிட்டார் அனுர” – சாமர சம்பத் பாராளுமன்றத்தில் கூச்சல் !

“வடக்குக்கு அள்ளிக்கொடுத்துவிட்டார் அனுர” – சாமர சம்பத் பாராளுமன்றத்தில் கூச்சல் !

 

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு 6000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய மாகாணங்களுக்கு இவ்வாறு அதிகளவிலான நிதி ஒதுக்கப்படவில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் குற்றஞ்சாடியுள்ளார் .

வரவு செலவுத் திட்டத்தின் முதல் நாள் விவாதத்தில் சாமர சம்பத் மேலும் தெரிவிதுள்ளதாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஐசிங் பூசிய கேக்கினை முன்வைத்துள்ளார். குறிப்பிட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் இல்லையேல் பிரச்சினைகள் மாத்திரமே மிகுதியாகும்.

எமது அரசாங்கத்தில் முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களின் சம்பளம் 2000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. ஆனால் இந்த வரவு செலவுத் திட்டத்தில் 1000 ரூபாய் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு இது போதுமானதல்ல. இந்த தீர்மானத்தை மீளாய்வு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் தமது குறைகளை எங்களிடம் குறிப்பிடுகிறார்கள். அந்த குறைகளை நாங்கள் அரசாங்கத்திடம் குறிப்பிடுவோம். அந்த குறைகளுக்கு முறையான தீர்வை பெற்றுக் கொடுக்காவிடின் கோட்டபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஏற்பட்ட கதியே நேரிடும் என்றார்.