யாழில் கேரளக் கஞ்சாவுடன் மூவர் கைது !
நேற்றைய தினம் சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மைய பகுதியில் வைத்து 20 மில்லியன் பெறுமதியான 96 கிலோ 310 கிராம் கேரள கஞ்சா சோதனைகளின் போது கைப்பற்றப்பட்டுள்ளது. மீன்கள் ஏற்றிச் செல்லும் கூலர் ரக வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சாவகச்சேரி பொலிஸ் நிலைய அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையினால் வவுனியாவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
