கோப்பாய் அபிவிருத்தி குழு கூட்டம் – அடக்கி வாசித்த எம்.பி இராமநாதன் அர்ச்சுனா
கோப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில் கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டத்தில், வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, விவசாயம், கல்வி, நீர்ப்பாசனம் சம்பந்தமான வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இராமநாதன் அர்ச்சுனா, ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், பிரதேச செயலாளர், மற்றும் துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். அடுத்தடுத்து நல்லூர் பிரதேச செயலக கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் ஆகியவற்றில் எம்.பி இராமநாதன் அர்ச்சுனா பலத்த குழப்பங்களை ஏற்படுத்தியிருந்த போதும் கூட கோப்பாய் அபிவிருத்தி குழு கூட்டத்தில் எம்.பி இராமநாதன் அர்ச்சுனா அமைதி காத்ததுடன், முக்கியமான விடயங்களை நீங்கள் முன்வைப்பதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என எம்.பி அர்ச்சுனாவை நோக்கி எம்.பி ரஜீவன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
