கோபிநாத்

கோபிநாத்

நீயா நானா? ஒளிபரப்புத் தடை பின்னணியில் பிஜேபி !

நீயா நானா? ஒளிபரப்புத் தடை பின்னணியில் பிஜேபி !

 

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நீயா நானா? விவாத நிகழ்ச்சியில், பல்வேறு தலைப்புகள் விவாதிக்கப்பட்டு இருக்கின்றன. இவை மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. விவாத நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை புதிய தலைப்புடன் வெளியாகும்.

இந்நிலையில், மார்ச் 04 அன்று விஜய் டிவியின் வலைப்பக்கத்தில் மும்மொழிக்கொள்கை ஆதரவு, எதிர்ப்பு நீயா நானா? தொடர்பு போஸ்டர் வெளியானது. அந்த வாரத்தில் இதுதொடர்பான நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றமே மிஞ்சியது. அதேபோல, நடப்பு வாரத்தில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்பட்ட மும்மொழிக்கொள்கை தொடர்பான விவாத நிகழ்ச்சியும் ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களின் படி பிஜேபி கட்சியினர் விஜய் டிவி நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்ததாலேயே “மும்மொழிக்கொள்கை தொடர்பான விவாத நிகழ்ச்சி” ஒளிபரப்படவில்லை என்று கிசுகிசுக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் உளவியல் வைத்தியரும் பெரியாரிஸ்ட்டுமான ஷாலினி பிஜேபியின் கருத்துச் சுதந்திரத்தின் மீதான தடையை சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வு என விமர்சித்துள்ளார். விஜய் டீவி இந்த விவகாரத்தில் உத்தியோக பூர்வ விளக்கம் எதனையும் வெளியிடவில்லை.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் டொனால் ட்ரம்மிடம் அவமானப்பட்ட கார்ட்டூனை வெளியிட்டமைக்காக நக்கீரன் சஞ்சிகையை பிஜேபி முடிக்கியிருந்ததும் தெரிந்ததே.