கிளிநொச்சி மதுபான சாலைகள்

கிளிநொச்சி மதுபான சாலைகள்

அதிகரிக்கும் மதுபான சாலைகள் – கிளி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்! ஜனாதிபதிக்கு பறந்தது மகஜர் !!

அதிகரிக்கும் மதுபான சாலைகள் – கிளி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்! ஜனாதிபதிக்கு பறந்தது மகஜர் !!

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. அதிகரித்த மதுபான சாலைகளை மூடுமாறும் கோரி கிளிநொச்சி பசுமைப்பூங்கா முன்றலில் இருந்து ஆரம்பமாகிய இந்த போராட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது. பேரணியைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் சு. முரளிதரனிடம் மத தலைவர்கள் இணைந்து கையளித்தனர்.

ஏற்கனவே கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் மதுபான சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்தள்ளமையானது குடும்ப வன்முறைகள், தொடங்கி வாள்வெட்டு பிரச்சினைகளுக்கு அடித்தளமிட்டிருந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் வழங்கிய மதுபானசாலை அனுமதிகள் சமூக பிறழ்வுகளை மீள தூண்டியுள்ளது. கிளிநொச்சி மாவட்ட மக்களின் நம்பிக்கையை வென்ற பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூட கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ள மதுபான கடைகள் பற்றியோ அதனால் ஏற்படும் சமூக சீர்கேடுகள் பற்றியோ இதுவரை வாய்திறந்தது கிடையாது. “கிளிநொச்சி மாவட்டத்தில் மதுபான சாலைகள் இல்லை. அங்கே மதுபான சாலைகளை திறக்க வேண்டும்” எனக் கோரியவர் தமிழரசு கட்சியின் வேட்பாளர் சி. சிறிதரன் என முன்னாள் யாழ்.மாநகரசபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்திருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.

பெரும்பாலும் பாடசாலைகள் அமைந்துள்ள சுற்றுவட்டத்திற்குள் மதுபான சாலைகள் எவையுமே அமைக்கப்பபடக்கூடாது என வலியுறுத்தப்படுகின்றது. இருந்த போதிலும் கூட கிளிநொச்சியின் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் காணப்படும் நகரப்பகுதிக்குள் 07 வரையான மதுபான கடைகள் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இவற்றுள் வீரா எனப்படும் பெயர் கொண்ட மதுபானசாலைக்கான அனுமதியை பெற்றுக்கொடுத்தவர் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.