கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

இலங்கையின் கடன் நிலைத்தன்மையை அடைவதில் நாட்டிற்கு உதவ IMF உறுதிபூண்டுள்ளது – கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

கடன் மறுசீரமைப்பில் வெற்றியை அடைவதற்கான இலங்கையின் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva), பொருளாதார சீர்திருத்த திட்டத்தில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தையும் பாராட்டியுள்ளார்.

இலங்கைக்கும் அதன் வெளிநாட்டுப் பத்திரதாரர்களுக்கும், உள்ளூர் கடனாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கின்றன என்று ஜோர்ஜீவா கூறுகிறார்.

இந்த ஒப்பந்தங்கள் IMF-ஆதரவு திட்டத்துடன் ஒத்துப்போவதாகவும், இது கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் மற்றும் பொருளாதார மீட்சியை ஊக்குவிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் சீர்திருத்த முயற்சிகள் வெற்றியடைவதை உறுதிப்படுத்த சர்வதேச நிதி நிறுவனங்கள், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் மற்றும் பத்திரப்பதிவுதாரர்கள் ஆதரவினை இலங்கை தொடர வேண்டும்.

நிலையான வளர்ச்சி மற்றும் கடன் நிலைத்தன்மையை அடைவதில் நாட்டிற்கு உதவ IMF உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் நிலை ஏனைய நாடுகளுக்கும் ஏற்படலாம் – எச்சரிக்கிறது சர்வதேச நாணய நிதியம்!

அரசாங்கங்கள் வறிய மக்களிற்கு உதவமுன்வராவிட்டால் இலங்கையின் நிலை உலகின் ஏனைய நாடுகளில் உருவாகலாம் என சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எச்சரித்துள்ளார்.

உணவு எரிபொருட்களின் விலைகளை மானிய அளவில் சமூகத்தின் வறிய மக்களிற்கு அரசாங்கங்கள் வழங்கவேண்டும்,அரசாங்கங்களின் உரிய ஆதரவு இல்லாவிட்டால் இலங்கையின் நிலை ஏனையநாடுகளில் உருவாகலாம்.

உலகம் முழுவதும் வாழ்க்கை செலவு அதிகரிப்பால் மக்கள் நெருக்கடியில் சிக்குண்டுள்ளனர்.
மக்களிற்கு அவசியமான உதவிகளை மிகவும் தெரிவுசெய்யப்பட்ட முறையில் வழங்கவேண்டும் மானியங்களை மக்களிற்கு நேரடியாக வழங்கவேண்டும்.

மேலும் வாழ்க்கை செலவு தொடர்பில் இரண்டு முன்னுரிமைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் ஒன்று சமூகத்தின் வறிய மக்கள் – அவர்களே உணவு, எரிபொருள் விலை அதிகரிப்பினால் தற்போது நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முன்னுரிமை உக்ரைன் யுத்தத்தினால் மோசமாக பாதிக்கப்பட்ட வர்த்தகங்களிற்கு வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.