கிட்ணன் செல்வராசா

கிட்ணன் செல்வராசா

யாழ் நூலகத்துக்கு பாரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளமை என்.பி.பி மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது – பா.உ கிட்ணன் செல்வராசா !

யாழ் நூலகத்துக்கு பாரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளமை என்.பி.பி மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது – பா.உ கிட்ணன் செல்வராசா !

யாழ் நூலகத்தை புனரமைப்பதற்கு பாரிய நிதி ஒதுக்கியுள்ளமை, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் சிறந்த அபிமானமாகும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராசா தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “இலங்கைவாழ் ஒட்டுமொத்த மக்களையும் உள்ளடக்கிய வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இம்முறை உழைக்கும் மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் சார்பான வகையில் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் பெருந்தோட்ட மக்களுக்கு 1700 சம்பளத்தை வழங்குவதற்கான திட்டங்கள் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் வாழ்வியலை மேம்படுத்துவதற்கும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்குமான திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.