காதலன் இறந்த செய்தி கேட்டு காதலி தற்கொலை !
யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் நேற்றைய தினம் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அந்த இளைஞன் குளத்தில் தாமரைப்பூ பறிக்கும் போது உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சுட்டிபுரத்திற்கு அருகிலுள்ள குளமொன்றில் இளைஞனின் சடலம் மிதப்பாதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்று விசாரணை செய்த போது இச் சம்பவம் தெரியவந்துள்ளது. மேலும் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை பிரதான வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் இளைஞனின் மரண செய்தியை அறிந்த வரணி பகுதியை சேர்ந்த காதலி வீட்டிலே தற்கொலை செய்து உயிர்மாய்த்துள்ளார். அவரது சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
