கலகொட அத்தே ஞானசார தேரர்

கலகொட அத்தே ஞானசார தேரர்

ஞானசார தேரர் சிறைச்சாலைக்கு சுற்றுலாச் செல்லவில்லை 

ஞானசார தேரர் சிறைச்சாலைக்கு சுற்றுலாச் செல்லவில்லை
கடந்த காலங்களைப்போல் வீட்டுச் சாப்பாடு சிறையில் கிடைக்கவில்லை குமுறிய ஞானசார தேரர்.
சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாகவும் வைத்தியர்கள் பரிந்துரைத்தும், வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாடியுள்ளார்.
இதற்கு முன்னர் 4 சந்தர்ப்பங்களில் சிறை தண்டனை அனுபவித்த போது நான் இவ்வாறு நடத்தப்படவில்லை. உண்மையில் இது அரசாங்கத்தின் முடிவா அல்லது சிறை அதிகாரிகளின் தன்னிச்சையான செயலா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று சமூக வலைத்தளங்களை அதிகமாக உபயோகப்படுத்துவோர் செல்வாக்கு மிக்கவர்களாகவுள்ளனர். அவ்வாறானவர்களது அழுத்தங்கள் காரணமாகவே எனக்கான மருத்துவ தேவைகள் கூட புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாம் ஒரு புற்றுநோய் என கூறிய இனவாதியான ஞானசார தேரர் விடுதலை !

இஸ்லாம் ஒரு புற்றுநோய் என கூறிய இனவாதியான ஞானசார தேரர் விடுதலை !

 

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு, மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இஸ்லாம் மதத்திற்கு எதிரான அவதூறான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு 9 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இதற்கு எதிராக ஞானசார தேரரின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்திருந்த மனுவை பரிசீலித்து, வழக்கு தொடர்பான மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை, இறுதித் தீர்ப்பு அறிவிக்கும் வரை குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கலகொட அத்தே ஞானசார தேரர் 2016 ஜூலை 16 ஆம் திகதி கொழும்பு, கிருலப்பனை பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​“இஸ்லாம் ஒரு புற்றுநோய்.. அதனை ஒழிக்க வேண்டும்” என குறிப்பிட்டு இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டமைக்காக அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.