கனடாவில் துப்பாக்கிச் சூட்டில் பலியான இந்திய மாணவி !

கனடாவில் துப்பாக்கிச் சூட்டில் பலியான இந்திய மாணவி !

கனடாவில் துப்பாக்கிச் சூட்டில் பலியான இந்திய மாணவி !

கனடாவில் துப்பாக்கிச் சூட்டில் பலியான இந்திய மாணவி !

கனடாவில் உள்ள ஒண்டாரியோ மாகாணத்தில் ஹாமில்டன் எனும் பிரதேசத்தில் ஏப்ரல் 18 அன்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இந்தியப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொஹாவ்க் கல்லூரியில் படித்து வந்த ஹர்சிம்ராத் ரான்தவா எனப்படும் மாணவியே உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சம்பவத்தன்று மாணவி சவுத் பெண்ட் சாலையில் பேருந்துக்காக காத்திருந்த போது இரண்டு கார்களில் வந்த நபர்களிடையே ஏற்பட்ட மோதலில் உருவான துப்பாக்கி சண்டையில் ஒருவரை ஒருவர் தாக்கிய போது மாணவி மீது தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயம் அடைந்துள்ளார்.
மேலும் அவரை அங்குள்ளவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல்கள் குறித்து கனடாவின் காவல்துறையினர் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு இந்திய துணை தூதரகம் மிகவும் ஆழ்ந்த இரக்கம் தெரிவித்ததோடு தாம் மாணவியின் குடும்பத்துடன் தொடர்பிலிருந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவோம் என தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து தெரிவிக்கையில் கனடாவில் கடந்த சில நான்கு மாதங்களாக நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றனர். அதில் பஞ்சாபை சேர்ந்த 22 வயதை உடைய மாணவர்கள் 2024 டிசம்பர் 1 ஆம் திகதி இறந்துள்ளார்கள் , அதில் குறாஸ் சிங் எனும் முதுகலை மாணவன் கத்தியால் குத்தபட்டும் , மற்றொரு மாணவி ராஜ்புத் மரம் விழுந்தும் உயிரிழந்துள்ளார் எனவும் , டிசம்பர் 6 ஆம் திகதி ஹார்ஷன் தீப் சிங் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தோடு இந்த மாணவியும் இறந்த சம்பவம் கனடாவில் வாழும் இந்தியர்களுக்கு பெருமச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.