புதுக்குடியிருப்பில் மட்டும் 27 கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை !
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பை அண்டிய பகுதிகளில் மட்டும் 27 இரகசிய கசிப்பு உற்பத்தி நிலையங்கள் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. மன்னகண்டல் முதல் வள்ளிபுனம் வரை இந்த முற்றுகை இடம்பெற்றுள்ளது. சட்டவிரோதமாக கள்ளச்சாரயம் காய்ச்சிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் தப்பிச் சென்று விட்டனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. ஊழல் ஒழிப்பு அணி வன்னியும் தொடர்ச்சியாக கசிப்பு , போதைப் பொருள், வாள்வெட்டு மற்றும் ஆயுக்கடத்தல் சம்பந்தமாக வெளிப்படுத்தி வருகின்றது.
தர்மபுரம் பகுதியில் இடம்பெறும் சட்ட விரோத நடவடிக்கைகளின் பின்னணியில் கிளிநொச்சி நடப்பு பாராளுமன்ற உறுப்பினர் மீதும் குற்றம் சாட்டப்படுகின்றது.
இந்த விடயம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்திருந்தது. முல்லைத்தீவில் அதீத படையினர் பிரசன்னத்திற்கு மத்தியிலும் கசிப்பு வியாபாரம் கோலோச்சுவதாக தமிழரசுக் கட்சி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றத்தில் ஆதங்கம் தெரிவித்துள்ளார். அ
