ஓடும் ரயிலில் ஏரிஎம்மெஷின் (ATM)

ஓடும் ரயிலில் ஏரிஎம்மெஷின் (ATM)

ஓடும் ரயிலில் ஏரிஎம்மெஷின் (ATM)

ஓடும் ரயிலில் ஏரிஎம்மெஷின் (ATM)

அபிவிருத்தி அடைந்த நாடுகள் என மார் தட்டும் நாடுகளுக்கே முன்னோடியாக இந்தியா ஓடும் ரயிலில் முதன்முறையாக ஏரிஎம் இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது. மும்பையிலிருந்து மான்மாட் வரை இயக்கப்படும் பஞ்ச்வாடி எக்ஸ்பிரஸ் புகையிரத சேவையிலேயே இந்தியாவின் மத்திய ரயில்வே இச்சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ரயிலில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் இச்சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

உலகத்தில் இணையவழி மற்றும் பண அட்டைகள் மூலம் பரிவர்த்தணை அதிகமாகி வருகிறது. எப்படியாயினும் வங்கிகளிலிருந்து நாணயத்தாள்களாக பணத்தை எடுத்து பயன்படுத்துவதும் இன்னும் தொடரத்தான் செய்கின்றது. அந்தவகையில் பணம் எடுக்கும் ஏரிஎம் இயந்திரங்கள் தமது செல்வாக்கை இன்னும் கூட இழக்கவில்லை என்று கூறலாம்.