ஐக்கியநாடுகள் சபை

ஐக்கியநாடுகள் சபை

“ஒவ்வொரு 11 நிமிடமும் ஒரு பெண் அல்லது சிறுமி தனது நெருங்கிய உறவினராலோ அல்லது காதலனாலோ கொல்லப்படுகின்றனர்.” – ஐக்கிய நாடுகள் சபை

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் நவம்பர் 25 அன்று கடைபிடிக்கப்படுகிறது.

“ஒவ்வொரு 11 நிமிடமும் ஒரு பெண் அல்லது சிறுமி தனது நெருங்கிய உறவினராலோ அல்லது தனது காதலனாலோ கொல்லப்படுகின்றனர்.” என ஐ.நா தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஆற்றிய உரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை என்பது உலகளவில் மிகவும் பரவலாக நிகழும் மனித உரிமை மீறலாகும். ஒவ்வொரு 11 நிமிடமும் ஒரு பெண் அல்லது சிறுமி தனது நெருங்கிய உறவினராலோ அல்லது தனது காதலனாலோ கொல்லப்படுகின்றனர்.

கொரோனா தொற்றிலிருந்து பொருளாதாரக் கொந்தளிப்பு வரை தவிர்க்க முடியாமல் இன்னும் அதிகமான உடலாலும் மற்றும் மனதாலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். உலக நாடுகளின் அரசுகள், பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க தேசிய அளவில் செயல் திட்டத்தை வகுத்து, நடைமுறைப் படுத்த வேண்டும். பெண்களின் உரிமைகளுக்கு ஆதரவாக நின்று குரல் எழுப்புங்கள் என தெரிவித்தார்.

உலக அளவில் சுமார் 70 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு – ஐக்கியநாடுகள் சபை அனுமானம்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் உணவு விநியோகத்தை பாதிப்பதன் விளைவாக கிட்டத்தட்ட 70 லட்சம்  குழந்தைகள் தங்களது வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் பாதிக்கப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
118 ஏழை மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் கொரோனா ஏற்படுத்தும் தாக்கத்தை நிபுணர்களின் குழு விவரித்துள்ளது. அந்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே மிதமாக அல்லது கடுமையாக உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் பாதிக்கப்படுவது 14.3 சதவிகிதம் அதிகரிக்கும் என்று அவர்கள் கண்டறிந்தனர், இதன் விளைவாக கூடுதலாக 67 பாதிப்புகள் அதிகரிக்க வழிவகுக்கும் என கூறப்படுகிறது.
ஆரம்பகால வாழ்க்கையில் ஊட்டச்சத்தின் மீது கொரோனா தொற்றுநோயின் ஆழமான தாக்கம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஒன்றிணைந்த விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், மேலும் கல்வியில் வாழ்நாள் முழுவதும் ஏற்படும் பாதிப்புகள், நாட்பட்ட நோய் அபாயங்ளை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உடல் மிகவும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள போது தசைகள் மற்றும் கொழுப்பு மறைந்து போகும் போது தங்களது உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாத பாதிப்பு ஏற்படும் என கூறியுள்ளனர்.