வடமாகாண சுகாதாரப் பொறுப்பாளர்களிடம் திட்டங்கள் இல்லை: காய்ச்சலால் உயிரிழப்புகள் தொடருகிறது! எலிக்காய்ச்சல் தாக்கம் இன்னமும் தொடர்கிறது !
எலிக்காய்ச்சலின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் உள்தாக யாழ் மாவட்ட சுகாதார பணிப்பாளர் ஆ கேதிஸ்வரன் தெரிவிக்கின்றார். ஆனால் மேலும் நால்வர் நேற்று எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒன்றுக்குப் பின் ஒன்று முரணாண செய்திகள் வளிவருகின்றது. இதுவரை 9 நோயாளிகள் எலிக்காய்ச்சலால் மரணித்துள்ளனர், 234 பேர் இக்காய்ச்சல் தொற்றுக்கு இலக்காக உள்ளனர். இதைவிடவும் திடீரென வந்த காய்ச்சல்களால் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மரணங்கள் சம்பவித்துள்ளது. இவை எழுந்தமான மரணங்களா? அல்லது இந்த மரணங்களிடையே ஏதும் தொடர்புகள் உள்ளதா என்பது உறுதியாகத் தெரியவரவில்லை.
இதற்கிடையே நேற்று கிளிநொச்சியில் நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் தர்மசிறி பத்திரண தங்களிடம் வடமாகாணத்துக்கோ, யாழ் மாவட்டத்துக்கோ உரிய பிரதான திடடமிடல் இல்லையெனத் தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சியுற்ற கடல்தொழில் அமைச்சர் எப்படி இப்படியொரு திட்டமிடல் இல்லாமல் இயங்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் கடந்த காலங்களில் எவ்வாறு இயங்கினீர்களோ எமக்குத் தெரியாது ஆனால் இனிவரும் காலங்களில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என அதிகாரிகளை எச்சரித்தார்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினராக சுகாதாரத் திட்டங்கள் தொடர்பில் தனக்கு மருத்துவமனைகளுக்குச் சென்று ஆவணங்களைக் பார்க்க அனுமதி வேண்டும் என்று கோரியிருந்தார் அர்ச்சுனா. அதற்குப் பதிலளித்த அமைச்சர் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினராக நீங்கள் அவற்றைப் பார்ப்பதற்கு உங்களுக்கு சகல அனுமதியும் உள்ளது என்றும் ஆனால் போகும் இடங்களில் குழப்பம் விளைவிக்காமல் நடத்துகொள்ள வேண்டும் என்றும் நளினமாகச் சுட்டிக்காட்டினார். பா உ அர்ச்சுனா உட்பட சiபியில் இருந்தவர்கள் அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.