எம்.பி இராமநாதன் அர்ச்சுனா

எம்.பி இராமநாதன் அர்ச்சுனா

கக்கூஸ் கழுவி உழைத்த பணத்தை – கட்டுப் பணம் செலுத்த கோருகிறார் அர்ச்சுனா !

கக்கூஸ் கழுவி உழைத்த பணத்தை – கட்டுப் பணம் செலுத்த கோருகிறார் அர்ச்சுனா !

“வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் சுயேட்சை குழுவாக இத்தேர்தலில் போட்டியிட உள்ளோம். இதற்கமைய யாழிலுள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்கு முதற்கட்டமாக கட்டுப்பணத்தை செலுத்தி இருக்கிறோம். ஏனைய இடங்களில் கட்டுப் பணம் செலுத்துவதற்கு எம்மிடம் போதிய நிதி இல்லை” என்று தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களை கக்கூஸ் கழுவி பிழைப்பவர்கள் எனப் பல தடவை சுட்டிக்காட்டிய பா உ அர்ச்சுனா தற்போது உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட கக்கூஸ் கழுவிய பணத்தை அனுப்பச் சொல்லிக் கோருகின்றார்.

யாழிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்காக யாழ்.தேர்தல் திணைக்களத்தில் நேற்றையதினம் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தினார்.

இதன் போது கருத்து தெரிவித்த அவர், “அனைத்து சபைகளுக்கும் கட்டுப்பணத்தை செலுத்தி சகல இடங்களிலும் தேர்தலில் போட்டியிடுவோம். இதேவேளை எனது சுயேச்சைகுழு வடக்கில் தமிழ்தேசியம் பேசும் எந்த கட்சியுடனும் இணைய தயாராக உள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன் மணிவண்ணன் அணியுடன் சேருவது தொடர்பில் மாறுபட்ட கருத்தை வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.