என்பிபி மீது பழிபோட ஓடித்திரியும் போலித் தமிழ் தேசியம் – பேனைப் பெருச்சாளியாக்கும் முயற்சிகள் !
கிரிபத்கொட பிரதேசத்தில் தனிநபர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காணொளியொன்று சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக பரப்பப்பட்டு வருகின்றன. அக்காணொளியில் ஆண் ஒருவர் பிரதான சாலையொன்றில் தூரத்திச் சென்று தாக்கப்படுகிறார். இந்தக் காணொளியை பகிரும் சில தமிழ் சமூகவலைத்தள பயனாளிகள் என்பிபியினரே வீதியில் வைத்து காட்டுமிராண்டித்தனமாக பொதுமகனை தாக்குவதாக குற்றம் சாட்டினர்.
உண்மையில் நடந்தது என்னவென்றால் கிரிபத்கொட பகுதியில் நடந்த பெண்ணொருவருடனான காதல் விவகாரத்தாலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறாக தேர்தல் காலத்தில் பல போலியான காணொளிகள் பரப்பட்டு வருவது தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு பல பொய்ச் செய்திகளும் அரைகுறைத் தகவல்களும் எதிர்க் கட்சிகளால் பரப்பப்பட்டு வருகின்றது. தமிழ் கட்சிகள் உட்பட்ட எதிர்கட்சிகள் மக்கள் ஏன் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நியாயத்தை வைக்கவில்லை. உள்ளுராட்சி சபையை வென்றால் தாங்கள் என்ன செய்வோம் என்றும் அவர்கள் எதையும் முன் வைக்கவில்லை. உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிந்ததுமே கட்சிக் கொள்கைகள் இவ்வாமலேயே போட்டியிட்ட இவர்கள் மத்தியில் பதவிக்கான போட்டிகள் வலுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவை பற்றி நல்லூர் பிரதேச சபை பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய மாநகரசபை வேட்பாளர் எஸ் கபிலன் “நாங்கள் பேசுவதை அப்படியே போடுங்கள் வெட்டிக் கொத்தி திரித்து போடுகின்றீர்கள். எல்லாத் தொழிலுக்கும் ஒரு தொழில் தர்மம் இருக்கின்றது. அப்படிச் செய்யாதவர்களை என்னவென்று அழைப்பது” என்றும் கேள்வி எழுப்பினார். “தேசிய மக்களுடைய ஆட்சியில் எங்களை விமர்சிப்பதற்கும், தூற்றுவதற்குமான சுதந்திரத்தை நாங்கள் தந்திருக்கின்றோம்” என்பதையும் அவர் கோடிட்டுக் காட்டினார் மாநகரசபை வேட்பாளர் எஸ் கபிலன். ‘இந்த உரை ஸ்ரிட்ஸ் ஒப் ஈழம்’ என்ற காணொலிக் குழுமத்திலிருந்து பெறப்பட்டது. ஊடகங்களில் குறிப்பாக சமூக ஊடகங்களில் சேறுபூசல்களைப் பார்க்கின்ற போது மனவருத்தமாக இருப்பதாக தனது ஆதங்கத்தை தேசம்நெற் நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
