ஒன்பது கட்சி உள்ளுராட்சிக் கூட்டணி ஏழு கட்சிகளாக குறுகியது !
ஒன்பது கட்சிகள் இணந்து உருவாகிய உள்ளுராட்சிக் கூட்டணியில் போட்டியிடுவதில்லை என வடக்கு மாகாணசபையில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு பதவி நீக்கம் செய்யப்பட்ட பொன் ஐங்கரநேசன் தலைமையிலான பசுமைக்கட்சி அறிவித்துள்ளது. அதேபோல் பாலியல் காமுகர் பிரேமானந்தாவை வணங்கி வந்த தமிழ் மக்கள் கூட்டணியும் தனித்துப் போட்டியிடப் போவதாக கட்சியின் பிரதிநிதி சட்டத்தரணி மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
பசுமைக் கட்சியும், தமிழ் மக்கள் கூட்டணியும் வெளியேறியதற்குப் பின்னால் அவர்களுக்கு நிதி வழங்கும் புலம்பெயர் சக்திகளே பின்நிற்பதாகத் தெரிய வருகின்றது. இக்கட்சிகள் தேர்தலை களத்தில் உள்ள மக்களோடு அடையாளப்படுத்தி போட்டியிடுவதற்கு மாறாக புலத்திலிருந்து நிதி வழங்குபவர்களை மையமாக வைத்து கட்சிகளை சுயேட்சைக்குழுக்களை உருவாக்குவதாக குற்றச்சாட்டுகள் வருகின்றது.
