ஈ.பி.டி.பி

ஈ.பி.டி.பி

பிணையில் வெளிவந்த முன்னாள் எம்பி திலீபன் இந்தியாவில் கைது !

பிணையில் வெளிவந்த முன்னாள் எம்பி திலீபன் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்று இந்தியாவில் கைதானார்.

முன்னாள் ஈபிடிபி வன்னி மாவட்ட எம்பி குலசிங்கம் திலீபன் காசோலை மோசடி முறைப்பாடொன்றை அடுத்து டிசம்பர் 19 ஆம் திகதி கடந்த வருடம் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் வவுனியா மாவட்ட நீதிவானால் 15 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் மீதான வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் போலிக் கடவுச்சீட்டில் இந்தியாவினூடாக வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது கேரளாவின் கொச்சி என்ற இடத்தில் வைத்து தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குலசிங்கம் திலீபன் மதுரை விமானநிலையத்திற்கு இலங்கையிலிருந்து தனது சொந்தப் பெயரில் வந்ததாகவும் பின்னர் முகவர் ஊடாக போலி கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது. கைதான திலீபன் தமிழ்நாட்டில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெரும்பாலும் வழக்கு நடவடிக்கைகளுக்காக இவர் இலங்கை கொண்டு வரப்படலாம். சமீபங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கைதாகி பிணையில் இருக்கும் போது வெளிநாடு தப்பிச் சென்றவர்கள் இலங்கைக்கு மீண்டும் கொண்டு வரப்படுகிறார்கள்.

 

2.4: திலீபன் மட்டுமல்ல கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் கூட போலி கடவுச்சீட்டிடனூடாக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று அகதி தஞ்சம் எடுத்து வாழ்கின்றனர். இவ்வாறு இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் கூட தண்டனையிலிருந்து தப்பிக்க வெளிநாடுகளில் அகதித் தஞ்சம் கோருவதும் குறிப்பிடத்தக்கது. சமீபகாலங்களில் யாழில் கள்ள மணல் கடத்தி பிடிபட்டவர்களும், வாள் வெட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்களும் வழக்கிலிருந்து தப்பிக்க வெளிநாடுகளில் அகதி தஞ்சம் கோரி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

உறுதியான நிலைப்பாடும் ஒருமித்த கருத்தும் தமிழ் தலைமைகளிடம் இல்லை – ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு!

உறுதியான நிலைப்பாடும் ஒருமித்த கருத்தும் இல்லாத தலைமையால் தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் வழிநடத்தலை காண்பிக்க முடியுமா? என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்

யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவா் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் சந்தர்ப்பவாதிகளாக கட்டமைப்பை உருவாக்குவதாக கூறியவர்களில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

இது அரசியல் இலக்கற்ற சந்தர்ப்பவாத செயற்பாடு என ஏற்கனவே நாம் தெளிவுபடுத்தியிருந்தோம். அது இப்போது நடைமுறையில் அரங்கேறிவருகின்றது.

இவ்வாறான செயற்பாடுகளை தமிழ் மக்கள் உன்னிப்பாக அவதானித்துக்கொள்ள வேண்டும். பொதுக்கட்டமைப்பு என கூறிக்கொண்டவர்களில் ரெலோ அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளார்.

 

இது தேர்தல் பித்தலாட்டமாகவே காணமுடிகின்றது என ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் மேலும் தொிவித்தாா்.