இளங்கோவன்

இளங்கோவன்

“என்னுடைய பென்சன் 27 இலட்சத்தை பிரதம செயலாளர் இளங்கோவன் கள்ளக்கையெழுத்திட்டு சூறையாடிவிட்டார் “ ஆசிரியை கல்யாணியின் போராட்டம் !

“என்னுடைய பென்சன் 27 இலட்சத்தை பிரதம செயலாளர் இளங்கோவன் கள்ளக்கையெழுத்திட்டு சூறையாடிவிட்டார் “ ஆசிரியை கல்யாணியின் போராட்டம் !
உதவி ஆங்கில ஆசிரியையாக இணைந்து நீண்டகாலம் பணியாற்றியவர் ஆசிரியை கல்யாணி. இவருடைய ஓய்வூதியம் 2006 டிசம்பர் 14 முதல் இதுவரையான 18 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருவதாக ஆசிரியை கல்யாணி ராஜூ வியூ என்ற யூரியூப் சனலுக்கு தெரிவித்துள்ளார். தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அடுக்கிச் செல்லும் இந்த வயோதிப ஆசிரியை வடகாமாணசபையின் பிரத செயலாளரான எல் இளங்கோவனே இதற்குக் காரணம் என மிக ஆணித்தரமாகக் குற்றசம்சாட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது முதல் அரச அதிகாரிகளை தட்டிக் கேட்பதில் மக்கள் முன்நிற்கின்றனர். பிரதேசசபைக் கூட்டங்களில், மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டங்களில் அதிகாரிகள் மீது சரமாரியான கேள்விகள் வைக்கப்படுகின்றது. தற்போது ஆசிரியை கல்யாணியும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்க புயலாகப் புறப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் முன்னாள் யாழ் மேயர் மணிவண்ணன் வழக்குப் பதிவு செய்வதாக கூறியிருந்தார். ஆனால் வழக்குப் பதிவு செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை.
தற்போது பா உ அர்ச்சுனா தான் ஆசிரியை கல்யாணியுடைய பிரச்சினையைப் பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளார்.
ஆசிரியை கல்யாணி உதவி ஆசிரியையாக சம்பளம் இல்லாது பணியாற்றி உள்ளார். ஆனால் அதன் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு அவருக்கு ஆசிரியை நியமனம் வழங்கப்படும் அதற்கான பென்சனும் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்து கல்வி அமைச்சு சுற்றிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது.
ஆனால் பிற்காலத்தில் இந்த நியமனம் தவறானு என இன்னுமொரு கடிதம் அனுப்பப்ட்டுள்ளது. அத்தோடு அவருக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எப்படிச் சாத்தியம் என்று கேள்வி எழுப்பும் ஆசிரியை கல்யாணி இது வடமாகாண சபையின் பிரதம செயலாளரான எல் இளங்கோவனே இந்த மோசடிகளுக்கு பின்னின்றதாக குற்றம்சாட்டுகின்றார்.
அரச அதிகாரிகள் மக்களை அலைக்கழிக்கின்றார்கள், சில சமயங்களில் பழிவாங்குகின்றார்கள் என்பது ஒன்றும் புதிய விடயமல்ல. இலங்கையில் உள்ள பெரும்பாலான மக்கள் இதனைத் தினம் தினம் எதிர் நோக்குகின்றனர். இந்த நிலைக்கு தன்னுடைய ஆட்சியில் முடிவு கட்டப்படும் என ஜனாதிபதி அனுர மீண்டும் மீண்டும் உறுதி அளித்து வருகின்றார். ஆட்சிக்கு வந்துள்ள ஆறு மாதங்களில் பல மாற்றங்கள் நடந்து வருகின்றது. வட மாகாண அளுநர் வேதநாயகமும் தனக்குக் கீழுள்ள அதிகாரிகள் சிலரே மக்களை சரியான முறையில் நடத்தாதையிட்டு தான் மனம் வருந்துவதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பில் வட மாகாணத்தின் பிரதம செயலாளர் எல் இளங்கோவனுடன் தொடர்புகொள்ள முயற்சித்த போதும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆசிரியை கல்யாணியின் குற்றச்சாட்டு தொடர்பில் பிரதம செயலாளர் எல் இளங்கோவன் என்ன சொல்கின்றார் என்பது மிக முக்கியமானது. ஆசிரியை கல்யாணியுடைய குற்றச்சாட்டுக்கள் எவ்வளவுதூரம் உண்மையானது என்பது விசாரிக்கப்பட வேண்டிய விடயம். புpரதம செயலாளர் இளங்கோவன் தன் கருத்துக்களை பதிவு செய்யும் பட்சத்தில் அதனை தேசம்நெற் வெளிப்படுத்தும்.