யானைகளைப் பார்க்க சுற்றுலா வருகின்றனர் ! ஆனால் நாங்கள் யானைகளை அழிக்கின்றோம் ! ?
கடந்த 2024 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 24 லட்சமாக எகிறியிருந்தது. அவர்கள் இந்த அழகிய தீவையும் இங்குள் யானைகளையும் பார்க்கவே வருகின்றனனர். ஆனால் கடந்த ஆண்டு 386 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது .
பாதுகாப்பு திணைக்களத்தின் தகவல்களின் படி, அதிகப்படியாக 81 யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியும், 56 யானைகள் மின்சாரம் தாக்கியும் , உயிரிழந்துள்ளன .
இளம் வயதுடைய யானைகளே அதிகளவில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் , யானைகளின் தாக்குதல்களினால் 154 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் 488 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது .
இலங்கையின் யானைகள், IUCN இனால் 1986 ஆம் ஆண்டிலிருந்து அழிந்து போகும் அபாயமுள்ள விலங்குகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டு உள்ளமையும் கவனிக்கத்தக்கது.