நவீனமயப்படுத்தப்படும் இலங்கையின் முன்பள்ளிகள் – அமைச்சர் சாவித்திரி
அனைத்து முன்பள்ளிகளிலும் பொதுவான பாடத்திட்டத்துக்கான பரிந்துரைகளை அறிமுகப்படுத்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் முன்பள்ளிகளுக்காக தேசிய கொள்கையொன்றை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு இணையாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தற்போது நாட்டில் 13 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட முன்பள்ளிகளும் பதிவு செய்யப்படாத மூவாயிரம் முன்பள்ளிகளும் காணப்படுகின்றன. இந்நிலையில் முன்பள்ளி கட்டமைப்பு நவீனமயப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்துக்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக கல்வியமைச்சின் பங்களிப்புடன் குழு நியமிக்கப்பட்டுள்ளது. 09 மாகாணங்களிலும் உள்ள அனைத்து முன்பள்ளிகளிலும் ஒரே கொள்கையின் கீழ் இதனை நடைமுறைப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பாகும் என்றார்.
