இலங்கை பொலிஸ்

இலங்கை பொலிஸ்

கடமை நேரத்தில் போதையுடன் தள்ளாடும் பொலிஸ் பிரிவும் கிளீன் சிறீலங்காவுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் !

கடமை நேரத்தில் போதையுடன் தள்ளாடும் பொலிஸ் பிரிவும் கிளீன் சிறீலங்காவுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் !

பொலிஸ் கழிப்பறையில் வைத்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் வகை போதைப்பொருள் பயன்படுத்தி கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட நபர் அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றும் 39 வயதுடைய கான்ஸ்டபிள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வடக்கு இலங்கையில் அண்மைய காலத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை தொடர்பான குற்றங்களுக்கு பின்னணியிலும் பொலிஸார் செயற்பட்டுவருவதாக கடந்த வார நாடாளுமன்ற அமர்வில் தமிழ் எம்.பிக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்த நிலையில் இலங்கை பொலிஸ்பிரிவு முழுமையாக கிளீன் சிறீலங்கா திட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டு கிளீன் செய்யப்படவேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சியில் பொலிஸார் கள்ளச் சாராயம், கள்ளமரம் கடத்துவது, கள்ளமண் அகல்வதற்கு உடந்தை ? அமைச்சர் பிமல் ரத்நாயக்க

கிளிநொச்சியில் பொலிஸார் கள்ளச் சாராயம், கள்ளமரம் கடத்துவது, கள்ளமண் அகல்வதற்கு உடந்தை ? அமைச்சர் பிமல் ரத்நாயக்க

கிளிநொச்சியில் பொலிஸார் கள்ளச்சாராயம், கள்ளமரம் கடத்துவது, கள்ளமண் அகல்வதற்கு எல்லாம் உடந்தையாக இருக்கின்றனர், தமிழரசுக் கட்சியின் பா உ எஸ் சிவஞானம் சிறிதரனின் இடது வலது கரங்களும் இவற்றுடன் தொடர்புற்றிருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்து வந்தார். தற்போது அவர் பொலிஸார் மீது வைத்த குற்றச்சாட்டுக்களை யாழ் பா உ க இளன்குமரனும் முன்வைத்துள்ளார். இதே குற்றச்சாட்டுக்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்காவும் கிளிநொச்சி பொலிஸார் மீது வைத்துள்ளார்.

கிளிநொச்சி – இராமநாதபுரம், வவுனியா – ஈச்சங்குளம் பகுதி பொலிஸாரின் செயற்பாடுகளால் பொலிஸ் நிலையங்களை மூடுமாறு மக்கள் விரக்தியில் தன்னிடம் தெரிவித்ததாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்ட சட்டவிரோத வியாபாரங்களை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.

அதன்போது கருத்து தெரிவித்த பிமல் ரத்நாயக்க, வடக்கில் விரும்பத்தகாத செயற்பாடுகளால் பொலிஸார் மீது நம்பிக்கை இழந்து விரக்தி நிலையில் உள்ளனர். சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தால்இ உடனேயே சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு அந்த தகவல் செல்கின்றன. தமது பகுதியில் பொலிஸ் நிலையம் இருந்தும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் எதற்காக பொலிஸ் நிலையம், அதனை மூடிவிடுங்கள் என என்னிடம் தெரிவித்தனர் என்றார்.

அதற்கு பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் பதில் அளிக்கையில்இ கீழ்நிலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது நம்பிக்கையீனம் இருந்தால், மேலதிகாரிகளுக்கு தகவல் வழங்க முடியும் என குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் பொலிஸாரின் செயற்பாடுகளை காணொளிப் பதிவு செய்வதில் எந்த தடையும் இல்லை – பொலிஸ் மா அதிபர்

பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளையோ அல்லது ஏனைய செயற்பாடுகளையோ பொதுமக்கள் காணொளிப் பதிவு செய்வதைத் தடுக்கும் சட்டம் எதுவுமில்லை என, அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் தனக்கு கீழ் உள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவிக்குமாறு, பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகள் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

 

பொலிஸ் உத்தியோகத்தர்களின் பல்வேறு செயற்பாடுகளை காணொளிப் பதிவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த காணொளி காட்சிகளை எடுத்தவர்களை கைது செய்துள்ளதாகவும்,இது அலைபேசிகளில் பதிவாகியுள்ளதாகவும் இந்த கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.