இலங்கை பாடசாலை மாணவர்கள்

இலங்கை பாடசாலை மாணவர்கள்

29 சதவீத பாடசாலை மாணவர்கள் பாடசாலை இடைவிலகல் !

29 சதவீத பாடசாலை மாணவர்கள் பாடசாலை இடைவிலகல் !

இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 வீத பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி தலைமையில் சர்வதேச பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் வெளியிட்டுள்ள சுகாதார அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 நடைபெற்ற இந்த ஆய்வுகளின் படி, ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மாணவர்களில் 17.7 வீதமானோர் ஆரோக்கியமற்ற பானங்களை அருந்துவதுடன் இவர்களில் பெரும்பாலானோர் ஆண் மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆண், பெண் மற்றும் வயதுக்கமைய ஒரு சிகரெட் அல்லது இரண்டு சிகரெட்டுக்களை பயன்படுத்திய அல்லது பயன்படுத்த முயற்சித்த மாணவர்களின் எண்ணிக்கை 12.8 வீதமாக பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் விகிதம் கணிசமானளவு அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது. இவ்விடயம் தொடர்பில் கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

முகநூல் ஊடாக ஒழுக்கமைக்கப்பட்ட போதைப்பொருள் களியாட்டம் 18 பாடசாலை மாணவர்கள் கைது !

கொழும்பு வாழைத்தோட்டம் பிரதேசத்தில் உள்ள வாகனங்கள் பழுதுபார்க்கும் இடத்தில் நடைபெற்ற முகநூல் ஊடாக ஒழுக்கமைக்கப்பட்ட களியாட்டம் நிகழ்வில் கலந்து கொண்ட 18 பாடசாலை மாணவர்கள் நேற்று (29) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.

 

ராகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கொட்டாஞ்சேனை, புளுமண்டல், தெமட்டகொடை, வெல்லம்பிட்டி மற்றும் கொலன்னாவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 15 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்களில் 16 மாணவர்களும் 02 மாணவிகளும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

சந்தேக நபர்களை ராகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சட்ட முறைமை பற்றிய அறிவை பாடசாலை மாணவர்களுக்கு வழங்க திட்டம் !

நாட்டின் சட்ட முறைமை பற்றிய அறிவை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் நடைமறைப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும், சாதாரண மாணவர்களுக்கு சட்ட அறிவை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தற்போது 7-8 ஆண்டுகளாக, நாட்டின் அடிப்படை சட்ட முறைகள் பற்றிய கல்வியை சாதாரண தர மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்.

இது தொடர்பாக அமைச்சர்கள் குழு முடிவுவெடுத்துள்ளதுடன் அதை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான கல்விப் பாடத்திட்டம், சாதாரண தர மாணவர்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

2023ல் நடைமுறைப்படுத்துவோம் என நம்பினோம். ஆனால் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படுமா..? எனத் தெரியவில்லை.

இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டுக்குள் இந்த பாடத்திட்டம் மாணவர்களிடத்தில் கொண்டு சேர்க்கப்படும். ஏனெனில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் அடிப்படை சட்டம் மற்றும் அவர்களின் உரிமைகள் என்ன என்பதைப் பற்றிய புரிதலை கொண்டிருக்க வேண்டும்.

நம் நாட்டில் உள்ள பலருக்கு அவர்களின் உரிமைகள் என்னவென்று தெரியாது. அதனால்தான் சில நேரங்களில் அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளை சாதகமாக்கிக் கொள்கிறார்கள். அதனால் பல புதிய சட்டங்களை இயற்ற வேண்டியுள்ளது” என தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு உண்பதற்கு உணவு இல்லாத நிலை !

பாடசாலை மாணவர்களுக்கு உண்பதற்கு உணவு இல்லாத நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் ரெமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு தாங்கள் செயற்பட்டு வருவதாகவும், தற்போது ஒரு பகுதியினருக்கு மதிய உணவை வழங்குவதாகவும், நிதியொன்றை அமைத்து அதனை இரட்டிப்பாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.