நோயாளிகளை பணயக்கைதிகளாக வைக்கும் சுகாதார மாபியாக்களுக்கு சுகாதார அமைச்சர் எச்சரிக்கை !
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ சுகாதார சேவையை சீர்குலைக்க வேண்டாம் என எச்சரித்தார். நோயாளிகளை பணயக்கைதிகளாக வைத்து எதிர்காலத்தில் சுகாதார சேவையை சீர்குலைத்தால் அரசாங்கம் மக்கள் பக்கத்தில் இருந்து முடிவுகள் எடுக்கும் எனக் கூறினார். சுகாதார சேவையில் ஒன்றரை இலட்சம் பேர் பணியாற்றுவதாகவும், அவர்களினுடைய சேவை நாட்டிற்கு தேவை. அவர்களுடைய பிரச்சினைகளை கலந்துரையாட அரசாங்கம் தாயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
சமீபகாலங்களில் திடீரென வைத்தியர் உட்பட சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தங்களில் குதிப்பதால் புறநோயாளிகள் பிரிவு , வார்டு மற்றும் கிளினிக் வரும் நோயாளிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். அந்த அடிப்படையிலேயே அமைச்சர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மேலும் அவர் கூறும் போது சுகாதார நிபுணர்கள் இதனை புரிந்து கொள்வார்கள் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
