ஒன்லைனில் அதிகமாக இலங்கை சிறுவர்களின் ஆபாச வீடியோக்கள் !
நாட்டில் குழந்தைகளின் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஒன்லைனில் பதிவேற்றப்பட்டுள்ளதாகக் கூறி அமெரிக்க அரசாங்க நிறுவனம் ஒன்று முறைப்பாடுகளை தாக்கல் செய்துள்ளதாக குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகம் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஒரு காலத்தில் இலங்கை சிறுவர் பாலியல் உல்லாசப் பயணத்துறையின் தலைநகராக விளங்கியது. மேலும் ஒன்லைனில் ‘செக்ஸ்’ என்ற அடிப்படையில் தேடல்களை மேற்கொள்வதிலும் இலங்கை முன்நின்றுள்ளது. உல்லாசப் பயணத்துறை வளர்ந்துவரும் இன்றைய சூழலில் இதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.
குழந்தைகளுக்காகப் பணியாற்றும் அமெரிக்க அரசு நிறுவனமான NCMEC, இந்த முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்புப் பணியகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த தொடர்பாக, குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பணியகத்தின் பெண் தலைமை ஆய்வாளர் சமந்தா நேற்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளித்தார். இவை தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம், சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகத்திற்கு உத்தரவிட்டது.
தற்போதைய வரவு செலவுத் திட்டத்திலும் சிறுவர் பாதுகாப்பு விடயங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதோடு வறுமைக் கோட்டில் உள்ளவர்களின் கல்வி வளர்ச்சியிலும் கவனமெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
