இலங்கை சிறுவர்கள்

இலங்கை சிறுவர்கள்

அறுபது நாட்களில் சிறுவர்களுக்கு எதிராக 1400 குற்றச்செயல்கள் !

அறுபது நாட்களில் சிறுவர்களுக்கு எதிராக 1400 குற்றச்செயல்கள் !

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 1,401 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவற்றில் அதிகளவிலான முறைப்பாடுகள் சிறுவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் உரிமை மீறல்கள் தொடர்பானவை என குறிப்பிட்டுள்ளது.

மேலும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைச் செயல்கள் தொடர்பில் 332 முறைப்பாடுகளும், சிறுவர்களின் கல்வி உரிமை மீறப்படுவது தொடர்பில் 279 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

சிறுவர்களை அடிக்க தடை !

சிறுவர்களை அடிக்க தடை !

 

சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவதை தடை செய்யும் சட்டமூலம் மிக விரைவில் நிறைவேற்றப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சமூகத்திற்கு பெண்களின் பங்களிப்பு தொடர்பான விவாத த்தின் போதே இதனை தெரிவித்தார். குழந்தைகளை உடல் ரீதியாக தண்டிப்பது குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், வன்முறையால் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று குழந்தைகள் நம்பினால், அவர்கள் பெரியவர்களானாலும் அதைத் தொடர்வார்கள் என தெரிவித்தார் அமைச்சர். அந்தவகையில் சிறுவர்களுக்கு உடல் ரீதியாக தண்டனை வழங்குவதை தடை செய்யும் சட்டம் சிறுவர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றது.

குழந்தை மற்றும் பிள்ளை வளர்ப்பிலும் சரி மற்றும் கல்வி நிலையங்களிலும் சரி உடல் மற்றும் உள ரீதியான வன்முறையை பிரயோகிப்பதை மேற்குநாடுகள் நீண்ட காலத்திற்கு முன்பே சட்டரீதியாக தடைசெய்து விட்டன. பெற்றோர் அதிகாரத்துடன் பிள்ளைகளை அடித்து வளர்க்கும் கலாச்சாரம் முற்றாக ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் கைவிடப்பட்டு விட்டன. இலங்கை, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு என ஆசிய நாடுகளில் பிள்ளைகளை அடித்து வளர்ப்பது பெற்றோருக்கு இருக்கிற பிரத்தியேக அதிகாரமாக மற்றும் உரிமையாக கருதும் மனப்பாங்கு இருந்து வருகின்றது. பாடசாலைகளில் ஆசிரியர்கள் கூட மாணவர்களுக்கு நல்லொழுக்கம் கற்பிப்பதாக உடலியில் ரீதியான தண்டனைகளை வழங்குகின்றனர்.

ஒன்லைனில் அதிகமாக இலங்கை சிறுவர்களின் ஆபாச வீடியோக்கள் !

ஒன்லைனில் அதிகமாக இலங்கை சிறுவர்களின் ஆபாச வீடியோக்கள் !

 

நாட்டில் குழந்தைகளின் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஒன்லைனில் பதிவேற்றப்பட்டுள்ளதாகக் கூறி அமெரிக்க அரசாங்க நிறுவனம் ஒன்று முறைப்பாடுகளை தாக்கல் செய்துள்ளதாக குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகம் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஒரு காலத்தில் இலங்கை சிறுவர் பாலியல் உல்லாசப் பயணத்துறையின் தலைநகராக விளங்கியது. மேலும் ஒன்லைனில் ‘செக்ஸ்’ என்ற அடிப்படையில் தேடல்களை மேற்கொள்வதிலும் இலங்கை முன்நின்றுள்ளது. உல்லாசப் பயணத்துறை வளர்ந்துவரும் இன்றைய சூழலில் இதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.

குழந்தைகளுக்காகப் பணியாற்றும் அமெரிக்க அரசு நிறுவனமான NCMEC, இந்த முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்புப் பணியகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த தொடர்பாக, குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பணியகத்தின் பெண் தலைமை ஆய்வாளர் சமந்தா நேற்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளித்தார். இவை தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம், சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகத்திற்கு உத்தரவிட்டது.

தற்போதைய வரவு செலவுத் திட்டத்திலும் சிறுவர் பாதுகாப்பு விடயங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதோடு வறுமைக் கோட்டில் உள்ளவர்களின் கல்வி வளர்ச்சியிலும் கவனமெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுவர்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இலங்கை – ஒன்பதாயிரம் சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் ! 

சிறுவர்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இலங்கை – ஒன்பதாயிரம் சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் !

தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையின் அறிக்கைக்கு அமைவாக, 2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை, 580 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகி உள்ளன. ஏனைய சிறுவர் தொடர்பான 8746 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. இதில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகளாக 2,746 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ளது.

சிறுவர்கள் மீதான சித்திரவதை தொடர்பாக 1,950 முறைப்பாடுகளும், சிறுவர்கள் யாசகம் பெறுவது தொடர்பாக 229 முறைப்பாடுகளும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 42 முறைப்பாடுகளும், பாலியல் செயல்களுக்கு சிறுவர்களை தூண்டுவது தொடர்பாக 25 முறைப்பாடுகளும், குழந்தை திருமணங்கள் தொடர்பாக 14 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தில் முத்தையா யோகேஸ்வரி என்ற சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி ரகுராமின் நண்பர், பேராசிரியர் ரி கணேசலிங்கம் பற்றி பெண்ணிய வாதியும் மனித உரிமை வாதியுமான ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் வருமாறு கூறுகிறார்.