சிறுவர்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இலங்கை – ஒன்பதாயிரம் சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் !
தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையின் அறிக்கைக்கு அமைவாக, 2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை, 580 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகி உள்ளன. ஏனைய சிறுவர் தொடர்பான 8746 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. இதில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகளாக 2,746 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ளது.
சிறுவர்கள் மீதான சித்திரவதை தொடர்பாக 1,950 முறைப்பாடுகளும், சிறுவர்கள் யாசகம் பெறுவது தொடர்பாக 229 முறைப்பாடுகளும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 42 முறைப்பாடுகளும், பாலியல் செயல்களுக்கு சிறுவர்களை தூண்டுவது தொடர்பாக 25 முறைப்பாடுகளும், குழந்தை திருமணங்கள் தொடர்பாக 14 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தில் முத்தையா யோகேஸ்வரி என்ற சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி ரகுராமின் நண்பர், பேராசிரியர் ரி கணேசலிங்கம் பற்றி பெண்ணிய வாதியும் மனித உரிமை வாதியுமான ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் வருமாறு கூறுகிறார்.