இலங்கை கடவுச்சீட்டு

இலங்கை கடவுச்சீட்டு

24 மணிநேர கிழமையில் 7 நாட்கள் துரித கடவுச்சீட்டு விநியோகம் !

24 மணிநேர கிழமையில் 7 நாட்கள் துரித கடவுச்சீட்டு விநியோகம் !

கடவுச்சீட்டுகள் அச்சிடுவதை விரைவுபடுத்தவும், காலதாமதத்தைக் குறைக்கவும் கூடுதல் பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது நிலவும் பாஸ்போர்ட் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை பின்பற்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஓய்வுபெற்ற பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

1.1 மில்லியன் “P” வகை சிப் உட்பொதிக்கப்பட்ட கடவுச்சீட்டு கையேடுகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாஸ்போட் வழங்குவதில் ஏற்படும் தாமதங்களை நீக்கும் வகையில்இ தினசரி 4000 கடவுச்சீட்டுகளை வழங்கும் வகையில் 24/7 செயல்பட குடியகல்வு மற்றும் குடிவரவு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

கடவுச்சீட்டுக்களுக்காக காத்திருக்கும் இலங்கையருக்கு மகிழ்வான செய்தி !

7 இலட்சத்து 50,000 கடவுச் சீட்டுகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 

இதனடிப்படையில், இதற்கு முன்னர் அச்சிட்ட நிறுவனத்துக்கே அச்சிடும் பணிகளை ஒப்படைக்கவும் ஒருதொகை கடவுச்சீட்டுகள் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடையும் என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

 

திங்கட்கிழமையாகும் போது கடவுச்சீட்டுகள் நாட்டில் இருப்பில் இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.ஒன்லைன் கடவுச் சீட்டு தொடர்பில் நீதிமன்ற உத்தரவுக்கமையவே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.