இலங்கைத் துறைமுக அதிகார சபை

இலங்கைத் துறைமுக அதிகார சபை

கிழக்கில் துறைமுக அதிகார சபையும் – வடக்கில் வன இலாகாவும் மக்களின் காணி அபகரிப்பில் !

கிழக்கில் துறைமுக அதிகார சபையும் – வடக்கில் வன இலாகாவும் மக்களின் காணி அபகரிப்பில் !

இலங்கைத் துறைமுக அதிகார சபையானது பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 11 கிராம சேவையாளர் பிரிவில் அடங்கும் 5226 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி வைத்துள்ளது உள்ளது. இதில் 1882 ஏக்கரில் மக்கள் நீண்ட காலமாக வாழ்கின்றார்கள். துறைமுக அதிகார சபையிடம் இருந்து அதை விடுவிக்க வேண்டுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். குகதாசன் நேற்று நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

எம்.பி குகதாசன் மேலும் உரையாற்றிய போது திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் மாகாண மற்றும் உள்ளூராட்சி திணைக்களத்தின் கீழ் வரும் முதன்மையான வீதிகள் உள்ளக வீதிகள் மிகவும் மோசமான நிலையில் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. எனவே இதனை மறுசீரமைக்க வேண்டும். திருகோணமலை மாவட்டத்தில் பாலங்களும் பழுதடைந்துள்ளன. இவை நீண்ட காலத்துக்கு முன்னர் கட்டப்பட்டவையாகும்.இவற்றைப் புதிதாக அமைக்க வேண்டும். எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவில் வன இலாகாவின் காணி அபகரிப்பு பற்றி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். இது தொடர்பில் குறிப்பிட்டுள்ள எம்.பி ரவிகரன்இ முல்லைத்தீவு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 74.24 வீதமான நிரப்பரப்பு வன இலாகாகாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் காணிகளில் ஒரு துண்டு காணியேனும் விடுவிக்கப்படவில்லை. இந்த காணிகள் யாவும் தமிழ் மக்களுடைய விவசாய நிலங்களாகும்.

இது ஒரு புறமிருக்க வன ஜீவராசிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் நீர்நிலைகளும் அதுசார்ந்த இடங்களுமாக 61 ஆயிரத்து 401 ஏக்கர் நிலம் உள்ளது எனக் கூறினார். முல்லைத்தீவு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 4 லட்சத்து 82 ஆயிரத்து 321 ஏக்கர் வன இலாகா மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுபோக படையினர் தொல்லியல் திணைக்களம் மகாவலி அதிகாரசபை உள்ளிட்டவையும் காணிகளை கையகப்படுத்தியுள்ளன என தெரிவித்துள்ளார்.