இராணுவ வசமுள்ள கிளிநொச்சி காணிகளும் விடுவிக்கப்படும் ஜனாதிபதி வாக்குறுதி !
சனிக்கிழமையான ஏப்பிரல் 26 இல் கிளிநொச்சியில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்துள்ளார். கிளிநொச்சியில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு சொந்தமான காணிகள் விரைவில் விடுவிக்கப்படும். இது தொடர்பாக இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தால் மூடப்பட்ட வீதிகள் திறந்து விடப்பட்டது போன்று கிளிநொச்சியிலும் பொதுமக்கள் பாவணைக்கு தடை விதிக்கப்பட்ட வீதிகள் திறக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். அதேபோன்று போரில் வீடுகளை இழந்த மக்கள் மீண்டும் தமது வீடுகளை கட்ட முடியாதுள்ளனர். அம்மக்களுக்கு வீடுகளை கட்டிக்க ஆவன செய்யவதாகவும் ஜனாதிபதி வாக்குறுதியளித்தார்.
பாரம்பரியமாக பயிரிட்டு வந்த மக்களின் நிலங்கள் கூகுள் வரைபடத் துணையுடன் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் கையகப்படுத்துட்டுள்ள விவசாய நிலங்களும் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி கிளிநொச்சி மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசி உள்ளூராட்ச்சித் தேர்தலில் வாக்குச் சேகரித்தார்.
கிளிநொச்சிக் கூட்டத்தை முடித்துக் கொண்டு புதுக்குடியிருப்பில் தேர்தல்ப் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்த நம்பிக்கைக்கு கடுகளவு சீர்குலைக்க மாட்டோம் என்றும் உணர்ச்சிவசப்பட்டார்.
புதுக்குடியிருப்பில் உரையாற்றிய ஜனாதிபதி இனவாத அரசியல் இனியும் வேண்டாம். எங்களுடைய முதலாவது ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் விரைவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை மைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பில் மீண்டுமொரு தடவை நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்தில் பங்குபெறுமாறு புலம்பெயர் தமிழர்களிற்கும் அழைப்பு விடுத்தார்.
