இப்ராஹிம் ரைசி

இப்ராஹிம் ரைசி

இப்ராஹீம் ரைசி உயிரிழந்தமைக்கும் எங்களது நாட்டும் எந்த வித தொடர்பும் இல்லை – மறுக்கும் இஸ்ரேல்!

ஈரான் அதிபர் இப்ராஹீம் ரைசி உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்தமைக்கும் தங்களது நாட்டும் எந்த வித தொடர்பும் இல்லை என இஸ்ரேல்  திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த உலங்ககு வானூர்தி கிழக்கு அஸர்பைஜானுக்கு அருகிலுள்ள ஜோல்பா பகுதியில் நேற்று (19) விபத்துக்குள்ளானது.

அதன்போது, அதிபர் ரைசி உட்பட 8 பேர் உயிரிழந்ததாக ஈரானிய அரசு ஊடகம் உறுதிபடுத்தியது.

அத்துடன், ஈரான் அதிபரின் மரணத்திற்கு இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்புதான் காரணம் என சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தன.

இந்நிலையில், இஸ்ரேல், இந்த சந்தேகங்களை திட்டவட்டமாக மறுத்து வருவதோடு இது தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனங்களிடம் பேசிய இஸ்ரேல் அதிகாரிகள், ரைசியின் உலங்கு வானூர்தி விபத்துக்கு நாங்கள் காரணம் அல்ல,இது எங்களுடைய நடவடிக்கையும் அல்ல என திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

ஈரான் அதிபரின் இலங்கை வருகை ஒத்திவைப்பு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யும் திகதி இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நோக்கில் ஈரான் அதிபர் எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

ஆனால் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் பதற்றமான சூழல் காரணமாக இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஈரான் அதிபரின் இலங்கை விஜயத்தின் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் கொழும்பில் உள்ள ஈரான் தூதுவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, எதிர்வரும் 24ஆம் திகதி ஈரான் அதிபர் இலங்கைக்கு வராவிட்டால் உமா ஓயா திறப்பு தினத்தை ஒத்திவைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“பாலஸ்தீனத்துக்கு எதிரான போர்க் குற்றங்களுக்கு முடிவுகட்ட வேண்டும்” – ஈரான், அரேபியா அறிவிப்பு !

ஹமாஸ் – இஸ்ரேல் போர் குறித்து ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இருவரும் தொலைபேசியில் விவாதித்துள்ளனர். உலக அரங்கில் மிக முக்கியமான நகர்வாக இது பார்க்கப்படுகிறது.

Iran President, Saudi Crown Prince discuss Gaza in first talk since ties  restored - India Today

இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள ஈரானிய அரசு ஊடகம்,

“பாலஸ்தீனத்துக்கு எதிரான போர்க் குற்றங்களுக்கு முடிவுகட்ட வேண்டும்” என இரு தலைவர்களும் ஆலோசித்ததாக தெரிவித்துள்ளது. அப்போது, “நடந்துகொண்டிருக்கும் போரினை தடுக்க சர்வதேச அளவில் சவுதி புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது” என சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியிடம் உறுதியளித்தார் என்றும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதையும் சவுதி விரும்பவில்லை” என்றும் ஆலோசனையில் முகமது பின் சல்மான் கூறியிருக்கிறார். சவுதி மற்றும் ஈரான் இடையேயான இந்தப் பேச்சுவார்த்தைகள் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால், வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில், ஷியா முஸ்லிம் பிரிவு மதகுரு ஷேக் அல் நிமர் உட்பட 47 பேருக்கு 2016-ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த மரண தண்டனை பல்வேறு நாடுகளில் வசிக்கும் ஷியா பிரிவு முஸ்லிம்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஷியா முஸ்லிம்கள் அதிகம் வாழும், மேற்காசிய நாடான ஈரானிலும் இந்த விவகாரம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்த தவறவில்லை. இதனால், சவுதி – ஈரான் உறவில் விரிசல் ஏற்பட ஒருகட்டத்தில், ஈரான் உடனான உறவை முறித்துக் கொள்வதாக சவுதி அரேபியா பகிரங்கமாக அறிவித்தது.

இரு நாடுகளையும் மீண்டும் இணைக்க உலக நாடுகள் பலவும் ஆர்வம் காட்டின. இதன்பின் கடந்த மார்ச் மாதம் சீனா இரு நாடுகளுக்கும் மத்தியஸ்தம் செய்துவைத்தது. அதன்படி, ஈரானும், சவுதி அரேபியாவும் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டன. தொடர்ந்து இரு நாடுகளிலும் அடுத்த இரண்டு மாதங்களில் தூதரகங்களை திறக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த சமாதானங்களுக்கு பிறகு முதல் முறையாக இருநாட்டு தலைவர்களும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். இதனால் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் விவகாரத்தில் மேலும் சர்வதேச கவனம் விழுந்துள்ளது.

 

ஹிஜாப் அணிய மறுத்த ஊடகவியலாளர் – நேர்காணலை இரத்து செய்ய ஈரான் அதிபர் !

22 வயதான மஹ்சா அமினியின் மரணத்திற்குப் பிறகு ஈரானில் ஏறக்குறைய ஒரு வார போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்களில் சுமார் 50க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ள நிலையில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் இன்னும் தீவிரமடைய ஆரம்பித்துள்ளன.

இந்தநிலயில் ஹிஜாப் அணிய ஊடகவியலாளர் ஒருவர் மறுத்ததால் தொலைக்காட்சி நேர்காணலை இரத்து ஈரான் அதிபர் ரத்து செய்தமை சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

மூத்த பத்திரிகையாளர் கிறிஸ்டியன் அமன்பூர் வியாழனன்று ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் நேர்காணல் ரத்து செய்யப்பட்டது என்று அவர் கூறினார், அவர் தலையில் முக்காடு அணிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

செய்தி தொகுப்பாளர் ஹிஜாப் அணிய மறுத்ததால் ஈரான் அதிபர் செய்த செயல்! -  தமிழ்முரசம் செய்திச் சேவை

அமெரிக்க பொது ஒளிபரப்பு நிறுவனமான பிபிஎஸ்ஸில் நிகழ்ச்சியை நடத்தும் சிஎன்என் இன் தலைமை சர்வதேச தொகுப்பாளரான அமன்பூர், ஐ.நா பொதுச் சபையின் ஓரத்தில் புதன்கிழமை நேர்காணலுக்குத் தயாராக இருப்பதாக ஒரு உதவியாளர் தனது தலைமுடியை மறைக்க வலியுறுத்தினார்.

“நான் பணிவுடன் மறுத்துவிட்டேன். நாங்கள் நியூயார்க்கில் இருக்கிறோம், அங்கு தலையில் முக்காடு தொடர்பான சட்டமோ பாரம்பரியமோ இல்லை” என்று ஈரானிய தந்தைக்கு பிரிட்டனில் பிறந்த அமன்பூர் ட்விட்டரில் எழுதினார்.

“ஈரானுக்கு வெளியே நான் அவர்களை நேர்காணல் செய்தபோது முந்தைய எந்த ஈரானிய ஜனாதிபதியும் இது தேவையில்லை என்பதை நான் சுட்டிக்காட்டினேன்,” என்று அவர் கூறினார்.

“இந்த முன்னோடியில்லாத மற்றும் எதிர்பாராத நிபந்தனைக்கு என்னால் உடன்பட முடியாது என்று நான் சொன்னேன்.”

ரைசி இருந்த ஒரு வெற்று நாற்காலியின் முன் அமர்ந்திருக்கும் — முக்காடு இல்லாமல் — அவள் ஒரு படத்தைப் பதிவிட்டாள்.

கடும்போக்கு மதகுருவான ரைசியின் உதவியாளர், “ஈரானில் உள்ள சூழ்நிலையின்” காரணத்தால் தான் முக்காடு அணிவதை வலியுறுத்துவதாக அமன்பூரிடம் கூறினார்.

22 வயதான மஹ்சா அமினியின் மரணத்திலிருந்து ஈரானில் கிட்டத்தட்ட ஒரு வாரப் போராட்டங்கள் நடந்தன, அவர் பெண்கள் எப்படி உடை அணிவார்கள் என்பதில் மதகுருக்களின் விதிகளை அமல்படுத்தும் அறநெறிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் இறந்தார்.

எதிர்ப்புக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையில் குறைந்தது 31 ஈரானிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், இதில் பெண்கள் தலையில் முக்காடுகளை எரிப்பதைக் காண முடிந்தது என்று ஒரு அரசு சாரா குழு தெரிவித்துள்ளது.