இன்னுமொரு பிடோபைல்கள்: வட்டுக்கோட்டையில் 15 வயது மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூவர் கைது !

இன்னுமொரு பிடோபைல்கள்: வட்டுக்கோட்டையில் 15 வயது மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூவர் கைது !

இன்னுமொரு பிடோபைல்கள்: வட்டுக்கோட்டையில் 15 வயது மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூவர் கைது !

இன்னுமொரு பிடோபைல்கள்: வட்டுக்கோட்டையில் 15 வயது மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூவர் கைது !

வட்டுக்கோட்டை தொல்புரம் பகுதியில் வீடொன்றில் வைத்து 15 வயதான சிறுமி கடந்த மூன்று ஆண்டுகளாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். தாயின் பராமரிப்பில் வாழும் அச்சிறுமிக்கு இக்கொடுமை 13 வயதிலிருந்து ஆரம்பித்துள்ளது.

இனிப்பு பண்டங்களை கொடுத்து அச்சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஒரு கூட்டம், தங்களிடம் சிறுமியின் அந்தரங்க காணொளி இருப்பதாக பயமுறுத்தி தொடர்ந்து பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்து வந்திருப்பதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்த மோசமான செயலில் இரு பெண்கள் பிரதான குற்றவாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அதிலொரு பெண் ரிக்ரொக்கில் பிரபலமானவர் எனவும் கூறப்படுகிறது. குறித்த பெண்ணின் வீட்டிலேயே சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பாடசாலை மாணவியான இச்சிறுமியை தாயாருக்கு தெரியாமலேயே பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்கள். சம்பந்தப்பட்ட பெண்கள் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் பெற்று வந்துள்ளனர்.

யாழ் மனித உரிமைகள் ஆணையத்தில் மாணவி கொடுத்த வாக்கு மூலத்தின்படி மூன்றுபேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைதானவர்களில் இரு பெண்களும் ஒரு ஆணும் அடங்குவதாக கூறப்படுகிறது. கைதான 45 வயதான ஆண், சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த வருட இறுதியில் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் கூட பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமிகள் கைது செய்யப்பட்டமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெற்றோருக்கும் பாதுகாவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சரி மாணவர்களுக்கும் பாலியல் கல்வியின் அவசியத்தை இவ்வாறான துயர அனுபவங்கள் உணர்த்துகின்றன. பிள்ளைகள் ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை பாடசாலையிலேயே செலவிடுகின்றனர். மேற்கு நாடுகளில் ஆசிரியர்கள் வகுப்பறையில் அட்டவணைப் பாடங்களை மட்டுமே கற்பிப்பதில்லை. வகுப்பாசிரியரின் கடமை மாணவர்களின் உள, உடல் ஆரோக்கியத்திலும் பாதுகாப்பிலும் கவனம் செலுத்துதல் வேண்டும்.

இலங்கையில் இன்னமுமே பாலியல் கல்வி மற்றும் பாலியல் சுகாதாரம் தொடர்பில் போதிய விழிப்புணர்வும் அறிவும் பற்றாக்குறையாகவுள்ளது. கிளிநொச்சியில் கனிஸ்ட மகா வித்தியாலயத்தில் 16 ஆண் சிறுவர்கள் அப்பாடசாலை கிரிக்கெட் பயிற்றிவிப்பாளர் அலனால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான போது கூட பாடசாலை நிர்வாகம் கண்ணை மூடிக் கொண்டு இருந்தது.

இந்த விடயம் ஒரு கட்டத்தில் பூதாகரமாக வெடித்த போது எம்பி சிவஞானம் சிறிதரனின் அரசியல் செல்வாக்கால் மூடி மறைக்க பகீரத பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோரின் முயற்சியால் அலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பிடோபைஃல் (PEDOPHILE) தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். வட்டுக்கோட்டையில் கைதான 45 வயது ஆண் கூட பிடோபைஃல் ஆக இருக்க சந்தர்ப்பம் உண்டு. எனவே வட்டுக்கோட்டை பகுதியில் வேறு சிறுவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளார்களாக என பூரண விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். வட்டுக்கோட்டைச் சம்பவத்தில் கைதான பெண்கள் வேறு சிறுமிகளையும் இவ்வாறு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு விற்றுள்ளார்களாக என போலீசார் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

சிறுவர் நன்னடத்தை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சிறுமியை தமது பராமரிப்பில் எடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டும். சிறுமியின் எதிர்காலக் கல்வி மற்றும் சிகிச்சை தொடர்பில் வேண்டிய உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்க வேண்டும். இப்படியான சம்பவங்கள் நடக்கும் போது சமூகம் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.