அனுர அரசு இந்தியாவால் இலங்கை மீது திணிக்கப்பட்ட 13ஆம் திருத்தம்-மாகாணசபை முறையை நடைமுறையில் வைத்திருப்பார்களா? – அரசியல் செயற்பாட்டாளர் இக்னீஷியஸ் செல்லையா மனோரஞ்சனுடனான நேர்காணல்.
இன்று தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் அடையாளம் காணப்பட்டாலும் கூட அதன் ஆரம்ப புள்ளியான ஜே.வி.பி இந்திய ஏகாதிபத்தியத்தை முழுமையாக எதிர்க்கும் நோக்குடன் ஆரம்பகாலங்களில் செயற்பட்ட ஓர் அமைப்பாகும். இந்த நிலையில் ஆட்சியமைத்த தேசிய மக்கள் சக்தி தொடர்ந்தும் இந்திய எதிர்ப்பை நடைமுறைப்படுத்துமா..? புலிகளால் எதிர்க்கப்பட்ட 13ஆம் திருத்தத்தை – மாகாண சபை முறையை புலிகள் எதிர்த்ததன் பின்னணி..?, யாழ்பாண வெள்ளாளியம் 13ஆம் திருத்தத்தை எதிர்த்தது ஏன்..? தேசிய மக்கள் சக்தியின் வெற்றியில் அதன் அடித்தளம் பெறுகின்ற முக்கியத்துவம் என பல விடயங்களை அரசியல் செயற்பாட்டாளர் இக்னீஷியஸ் செல்லையா மனோரஞ்சனுடன் கலந்துரையாடுகிறார் தேசம் ஜெயபாலன்.
