மத்திய வங்கி மோசடி அர்ஜுன மகேந்திரனை அழைத்து வர வேண்டிய பொறுப்பு ரணிலுக்கு உள்ளது – ஆளும் தரப்பு !
மத்திய வங்கி மோசடி அர்ஜுன மகேந்திரனை அழைத்து வர வேண்டிய பொறுப்பு ரணிலுக்கு உள்ளது – ஆளும் தரப்பு !
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான விசாரணைகளுக்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை அழைத்து வருவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜதிஸ்ஸ தெரிவித்தார்.
அவரை இலங்கைக்கு நாடு கடத்த அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்த அமைச்சர், அவர் மீதான வழக்கு அவர் முன்னிலையிலோ அல்லது இல்லாமலோ தொடரும் என்றும் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதாகக் கூறி அர்ஜுன மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேறியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னர் பாராளுமன்றத்தில் கூறியதாகக் கூறிய அமைச்சர், மகேந்திரன் மீண்டும் நாடு திரும்புவதை உறுதி செய்வது முன்னாள் ஜனாதிபதியின் கடமை என்றும் கூறினார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி நடைபெற்று பெப்ரவரி மாதத்துடன் 10 ஆண்டுகள் நிறைவடைவதும் கவனிக்கத்தக்கது.
