அர்ஜுன மகேந்திரன்

அர்ஜுன மகேந்திரன்

மத்திய வங்கி மோசடி அர்ஜுன மகேந்திரனை அழைத்து வர வேண்டிய பொறுப்பு ரணிலுக்கு உள்ளது – ஆளும் தரப்பு !

மத்திய வங்கி மோசடி அர்ஜுன மகேந்திரனை அழைத்து வர வேண்டிய பொறுப்பு ரணிலுக்கு உள்ளது – ஆளும் தரப்பு !

 

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான விசாரணைகளுக்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை அழைத்து வருவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜதிஸ்ஸ தெரிவித்தார்.

அவரை இலங்கைக்கு நாடு கடத்த அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்த அமைச்சர், அவர் மீதான வழக்கு அவர் முன்னிலையிலோ அல்லது இல்லாமலோ தொடரும் என்றும் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதாகக் கூறி அர்ஜுன மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேறியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னர் பாராளுமன்றத்தில் கூறியதாகக் கூறிய அமைச்சர், மகேந்திரன் மீண்டும் நாடு திரும்புவதை உறுதி செய்வது முன்னாள் ஜனாதிபதியின் கடமை என்றும் கூறினார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி நடைபெற்று பெப்ரவரி மாதத்துடன் 10 ஆண்டுகள் நிறைவடைவதும் கவனிக்கத்தக்கது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய உத்தரவு !

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் பேர்ப்பச்சுவல் டிசரிஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அஜான் கார்திய புஜ்சிஹேவா ஆகியோரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பிலான குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர்கள் இந்த வழக்கு தொடர்பிலான விசாரணைகளுக்காக நேற்று வியாழக்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகி இருக்காமையின் காரணமாகவே இந்த உத்தரவை நீதிமன்றம் பிறபித்துள்ளது.

இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் ஜுன் மாதம் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.