அர்ஜுன மகேந்திர

அர்ஜுன மகேந்திர

பத்து பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டம் ஏற்படுத்திய பிணைமுறி விவகாரம் – அர்ஜுன மகேந்திரனுக்கு நோட்டீஸ் !

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை பெப்ரவரி 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்ப கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தினால் அரசாங்கத்திற்கு பத்து பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டில் அவர் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் கால பிரச்சாரத்தின் போது கடந்த  ஆகஸ்ட்  19ஆம் திகதி,  கிரிபத்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார, மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் நீதிமன்றினால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அர்ஜுன மகேந்திரன், தான் ஜனாதிபதியான பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.