அமெரிக்க சிறைக்கைதிகள் விடுதலை

அமெரிக்க சிறைக்கைதிகள் விடுதலை

அமெரிக்க ஊழல்: ஏட்டிக்குப் போட்டியாக குற்றவாளிகள் விடுதலை!

அமெரிக்க ஊழல்: ஏட்டிக்குப் போட்டியாக குற்றவாளிகள் விடுதலை!

அமெரிக்க ஜனாதிபதியாக ஓய்வுபெறப் போகும் ஜோ பைடனும் அமெரிக்க ஜனாதிபதியக பதவியேற்க உள்ள டொனால் ட்ரம்மும் ஏட்டிக்குப் போட்டியாக குற்றவாளிகளை விடுதலை செய்ய முற்பட்டுள்ளனர். இன்னும் சில வாங்களில் ஓய்வுபெறப்போகும் ஜோ பைடன் தனக்குள்ள விசேட அதிகாரங்களைப் பயன்படுத்தி குற்றவாளியாக நிரூபிக்கப்ட்டு தண்டணை பெற்ற அவருடைய மகன் ஹன்டர் பைடனுக்கு பொதுமன்னிப்பு அளித்துள்ளார். சட்டத்தை நீதியிடமே விட்டுவிடுவேன் என்று கூறிய ஜோ தற்போது தன்னுடைய உயிருடன் உள்ள ஒரே மகனைக் காப்பாற்ற களத்தில் இறங்கி விட்டார். ஹன்டர் பைடன் சட்டத்தை வளைத்து பல குற்றச்செயல்களில் தொடர்புடையவர். அது மட்டுமல்லாமல் டொனால் ட்ரம் பதவிகு;கு வந்து ஹன்டர் பைடனுக்கு எதிராக புதிய வழங்குகளைக் கொண்டுவந்தாலும் என அதிலிருந்தும் தனது மகனைக் காப்பாற்றுவதற்கான வகையில் மகன் ஹன்டர் பைடனைக் காப்பாற்றியுள்ளார் ஜோ. தன்னுடைய மகனை மட்டும் காப்பாற்றியது தற்போது பதவியில் உள்ள டெமொக்கிரட்டிக் கட்சிக்கு பிரச்சினையாகும் என்பதால் இன்னும் சிலருக்கும் பொது மன்னிப்பு வழங்கி அவர்களையும் விடுதலை செய்ய ஜோ பைடன் நடவடிக்கை எடுத்து

 

உலகெங்கும் அரசியல் நேர்மை, ஜனாநாயகம் பற்றியெல்லாம் விளக்கமளிக்கும் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் அண்மைக்காலமாக அரசியல் ரீதியில் அம்மணமாக்கப்பட்டுள்ளனர். காஸா – லெபனானில் இஸ்ரேலோடு கூட்டாக இணைந்து இனப்படுகொலை செய்யும் அமெரி;க்க அரசு அடிப்படை விழுமியங்களை இழந்து நிற்கின்றது. தற்போது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால் ட்ரம் குற்றவாளியாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட குற்றவாளி. அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாகு மோசடி மற்றும் கிரிமினல் குற்றங்களுக்காக தண்டனை பெற்ற குற்றவாளி.

 

கடந்த தேர்தலில் தோல்வியுற்ற ட்ரம் தேர்தல்களில் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் குற்றம்சாட்டி அமெரிக்க ஆட்சியின் மையப்புள்ளியான கப்பிற்றல் ஹில்லை முற்றுகையிடச் சொல்லி தன்னுடைய ஆதரவாளர்களைத் தூண்டினார். அவர்களும் அனைச் செய்து செனட் சபைக்குள் நுழைந்து கோட்டபாயாவின் ஜனாதிபதி மாளிகையைப் போன்று செனட்சபைக்குள் புகந்து அட்டகாசம் பண்ணினர். இதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ஜோ பைடனின் ஆட்சியில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் தற்போது ஆட்சிக்கு வரவுள்ள டொனால் ட்ரம் தான் பதவியேற்றதும் ஹபிடல் ஹில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வேன் என் டொனால் ட்ரம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல்யமான ரைம் சஞ்சிகை இந்த ஆண்டின் ‘பேர்சன் ஒப் தி இயர்’ என டொனால் ட்ரம்யை தெரிவு செய்துள்ளது. 2016 இலும் இதற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆனால் இம்முறை இவ்விருதை தான் விரும்புவதாக நளினமாகத் தெரிவித்தார். தவறாகவோ சரியாகவோ உலகில் பெரும் மாற்றத்தை ட்ரம் ஏற்படுத்துவார் என அச்சஞ்சிகை தெரிவிக்கின்றது.