அமெரிக்கா – ரஷ்யா

அமெரிக்கா – ரஷ்யா

உக்ரைனுக்கு மேலும் 250 மில்லியன் டொலர் இராணுவ உதவி – வௌ்ளை மாளிகை அனுமதி !

உக்ரைனுக்கு மேலும் 250 மில்லியன் டொலர் இராணுவ உதவிகளுக்கு வௌ்ளை மாளிகை அனுமதி அளித்துள்ளது.

 

இதில் வான் பாதுகாப்பு, ஆட்டிலரி மற்றும் ஆயுதங்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

ரஷ்யாவுடனான போரில் மேற்குலக நாடுகளின் உதவிகள் கிடைக்காவிட்டால் போர் முயற்சி மற்றும் தனது திறைசேரி மிகவும் ஆபத்தான நிலையை அடையுமென உக்ரைன் தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.

இதேவேளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்காவே தொடர்ந்தும் உக்ரைனுக்கு போர் உதவிகளை வழங்கி போரை தூண்டுகிறது என குற்றச்சாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

“பாலஸ்தீன் – இஸ்ரேல் மோதலுக்கு அமெரிக்காவே காரணம்.” – புடில் சாடல்!

இஸ்ரேல் – பாலஸ்தீனம் என இரண்டு பக்கமும் அமெரிக்கா கொடுத்த தேவையில்லாத அழுத்தம்தான், இந்த போருக்கு மூல காரணம் என்று ரஷ்யா விமர்சித்துள்ளது.

 

இஸ்ரேல் – பாலத்தீன போர் தற்போது சர்வதேச போராக உருவெடுத்து வருகிறது. முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் மிகப்பெரிய போராக மாறும் நிலை ஏற்பட்டு உள்ளது.

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பிரச்சனையில், தற்போது மற்ற நாடுகள் தலையிட்டு வருகின்றன. அமெரிக்கா ஏற்கனேவே போர் கப்பல்களை, ஆயுத தளவாடங்களை அங்கே அனுப்பி உள்ளது.

இதில் தற்போது மறைமுகமாக சவுதி – ஈரான் உள்ளிட்ட நாடுகளின் தலையீடும் தொடங்கி உள்ளது. ஒரு பக்கம் சவுதி – இஸ்ரேல் இடையே பொருளாதார ஒப்பந்தம் நடக்க இருந்தது. இதை மத்திய கிழக்கு நாடுகள் எகிப்து, ஈரான் போன்றவை விரும்பவில்லை.

 

இந்த ஒப்பந்தத்திற்கு இடையே தற்போது இஸ்லாமியர்களின் பாலஸ்தீனத்தை, இஸ்ரேல் தாக்கி வருகிறது.

இந் நிலையில் இந்த தாக்குதல் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவிக்கையில்,

அமெரிக்காவின் மத்திய கிழக்கு பகுதிக்கான கொள்கைகளின் தோல்விகளுக்கு இது ஒரு தெளிவான உதாரணம்.

அமெரிக்கா சமாதான தீர்வை ஏகபோகமாக கொண்டு வர முயன்றது. தாங்கள் வைத்ததுதான் சட்டம், நாங்கள் மட்டுமே அமைதியை கொண்டு வருவோம் என்று நினைத்தார்கள். அவர்கள் நினைத்தது நடக்கவில்லை, ஆனால் துரதிர்ஷ்டவசமாக அமைதிக்கு பதிலாக தற்போது போர்தான் உருவாகி உள்ளது.

இரண்டு பக்கமும் அமெரிக்கா கொடுத்த தேவையில்லாத அழுத்தம்தான் இந்த போருக்கு காரணம். பாலஸ்தீன மக்களின் பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் பார்க்கவில்லை. அவர்களை கணக்கிலேயே கொள்ளாமல் அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகள்தான் இந்த பிரச்சனைக்கு மூல காரணம்.

 

ஐநா இந்த விவகாரத்தில் தனிப்பட்ட பாலஸ்தீனம் என்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அதை இஸ்ரேலும் அமெரிக்காவும் மதிக்கவில்லை.

தனி பாலஸ்தீனம் மட்டுமே இந்த மோதலுக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும். பாலஸ்தீன மக்களின் தனிப்பட்ட கவலைகள், பிரச்சனைகள் பற்றி அமெரிக்கா யோசிக்கவில்லை என்று ரஷ்ய ஜனாதிபதி புதின் விமர்சித்துள்ளார்.

மீண்டும் 300 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவிகளை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்கா!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் திகதி போர் தொடுத்தது.

இந்தப் போர் தொடங்கி ஓராண்டையும் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள், தளவாட உதவிகளைச் செய்து வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனுக்கு புதிதாக சுமார் 300 மில்லியன் டொலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் ராக்கெட் லாஞ்சர்கள், பீரங்கிக்கான வெடிமருந்துகள் ஆகியவையும் இத்தொகுப்பில் அடக்கம். அதிபர் ஜோ பைடன் இதற்கு ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளார்.

இதேவேளை அமெரிக்கா தொடர்ந்தும் வழங்கும் போர்த்தளபாட உதவிகளே உக்ரைன் மீதான போருக்கான காரணம் என ரஷ்யா குற்றச்சாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பராக் ஒபாமா உள்பட 500 அமெரிக்கர்களுக்கு ரஷியாவில் நுழைய தடை !

உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. மேலும் ரஷியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா உள்பட 500 பேர் ரஷியாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் கூறும்போது,

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் நிர்வாகத்தால் தொடர்ந்து விதிக்கப்பட்ட ரஷியாவுக்கு எதிரான தடைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் 500 அமெரிக்கர்களுக்கு ரஷியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவுக்கு எதிரான ஒரு விரோதமான நடவடிக்கைக்கு கூட பதிலளிக்கப்படாமல் விடாது என்பதை அமெரிக்கா நீண்ட காலத்திற்கு முன்பே கற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

முன்னாள் கடற்படை தளபதி கறுப்பு பட்டியலில் – மேற்கத்திய நாடுகளின் மனித உரிமை மீறல் தொடர்பில் பேச அமெரிக்கா தயாரா என ரஷ்யா கேள்வி !

இலங்கையின் வடமேல் மாகாண ஆளுநரும் , முன்னாள் கடற்படை தளபதியுமான வசந்த கரண்ணாகொடவின் பெயர் அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது .

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் , அவர் மீதான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் , அவருக்கு விசா வழங்க மறுப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது . முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரண்ணாகொட உள்ளிட்டோருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது .

எனினும் , அவர் குறித்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்ததுடன் , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வடமேல் மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார் . கரண்ணாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ‘ தீவிரமான மற்றும் நம்பகத்தன்மையுடன் ‘ இருப்பதாகவும் , ஆளுநரோ அல்லது அவரது மனைவியோ அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார் . ‘ மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கும் , இலங்கையில் குற்றவாளிகளுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கும் அமெரிக்கா தமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்ணாகொடவினை கறுப்புப் பட்டியலில் சேர்த்த அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி இன்று (வியாழக்கிழமை) அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் இந்த முடிவு தொடர்பான கடுமையான கவலைகளை தெரிவித்துள்ளார்.

உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் அமெரிக்காவின் இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கையானது தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதில் இலங்கை எடுத்துள்ள முழுமையான அணுகுமுறைக்கு எதிரானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் ஜனநாயக ஆட்சி மற்றும் நல்லிணக்கக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள உறுதியான முன்னேற்றத்தின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளிவருவது துரதிர்ஷ்டவசமானது.

இந்த சவால்கள் இருந்தபோதிலும், நல்லிணக்கம், பொருளாதார மீட்சி மற்றும் சமூக – பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை அடைவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளை இலங்கை அரசாங்கம் தொடரும் எனவும் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் எனது பெயரும் எனது மனைவியின் பெயரும் இணைக்கப்பட்டமை தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை என வசந்த கரன்னகொட தெரிவித்துள்ளார்.

என் மீது எந்தவிதமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில், அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் எனது பெயரும் எனது மனைவியின் பெயரும் இணைக்கப்பட்டமை தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரனகொடவிற்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள தடை தொடர்பில் ரஷ்யா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஜகாரியன் கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

அங்கு கருத்து தெரிவித்த இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஜகாரியன், “இந்த நாட்டின் வடமேற்கு மாகாண ஆளுநரான முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் கீழ் பொருளாதாரத் தடை விதித்துள்ளனர் என்பதை இன்று அறிந்து கொண்டேன்.

கண்ணாடியால் ஆன வீட்டில் வாழ்ந்தால் கற்களை எறியாதீர்கள் என்ற ஆங்கிலப் பழமொழி உண்டு. அங்கிருந்து மேற்கத்திய நாடுகளில் மனித உரிமை மீறல்கள் பற்றி  பேசுவோம். அவர்கள் சொந்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

இதைவிட அதிகமான பிரச்சனைகள் இவர்களுக்கு உண்டு.ஆனால் உள்பிரச்சினைகளில் தலையிடுவதை ஏற்க முடியாது. இலங்கை உட்பட இறையாண்மை கொண்ட நாடுகள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி உங்களுக்கு விரிவுரை செய்ய யாருக்கும் உரிமை இல்லை. அது உங்களுடையது. உள் பிரச்சனை.”எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கைதிகளான ரஷ்யாவின் ஆயுதக்கடத்தல்காரனையும் – அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனையையும் மாற்றிக்கொள்ளும் ரஷ்யாவும் அமெரிக்காவும் !

12 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரஷ்ய ஆயுதக் கடத்தல்காரன் விக்டர் பௌட்டை மீட்டு, ரஷ்யக் காவலில் இருந்த அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனரை விடுவிப்பதில் அமெரிக்க அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது .

முப்பத்திரண்டு வயதான பிரிட்னி கிரைனர் அமெரிக்க தேசிய கூடைப்பந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் திறமையான வீராங்கனை . அவர் ஒரு ஒலிம்பிக் சாம்பியனும் கூட.

கடந்த பெப்ரவரியில், க்ரைனர் தனிப்பட்ட பயணமாக ரஷ்யாவுக்குச் சென்றபோது ‘கஞ்சா எண்ணெய்’ வைத்திருந்த குற்றச்சாட்டில் ரஷ்ய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கஞ்சா எண்ணெய் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக இருந்தாலும், ரஷ்யாவில் அது தடைசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரஷ்ய நீதிமன்றத்தால் கிரைனருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கிரைனரை விடுவிக்கும் முயற்சியில் பைடன் நிர்வாகம் தலையிட்டு ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. கூடைப்பந்து வீரர் கிரைனர் சார்பாக, அமெரிக்க சிறையில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஷ்ய ஆயுத வியாபாரி விக்டர் போட்டை வழங்க வேண்டும் என ரஷ்யா வழக்கு தொடர்ந்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் இந்த கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது.

அமெரிக்க ஏஜெண்டுகள் விக்டர் பௌட்டை தனி விமானத்தில் அழைத்து வந்து ரஷ்ய முகவர்களிடம் ஒப்படைத்தனர், ரஷ்ய முகவர்கள் கிரைனரை அழைத்து வந்து அமெரிக்க ஏஜெண்டுகளிடம் ஒப்படைத்தனர்.

ரஷ்யாவைச் சேர்ந்த விக்டர் பௌட், உலகின் மிகவும் பிரபலமான துப்பாக்கி கடத்தல்காரர். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு,பௌட் ஆயுதக் கடத்தலுக்குத் திரும்பினார்.

2008 ஆம் ஆண்டு, தாய்லாந்தின் பெங்கொக்கில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தபோது, ​​பாதுகாப்புப் படையினரால் பௌட் கைது செய்யப்பட்டு பின்னர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.