அனுர குமார – மகிந்த ராஜபக்ச

அனுர குமார – மகிந்த ராஜபக்ச

இணக்க அரசியல் சாபக்கேடு இல்லை என்கிறார் மகிந்தவின் கிளி அமைப்பாளர் மதனவாசன்

இணக்க அரசியல் சாபக்கேடு இல்லை என்கிறார் மகிந்தவின் கிளி அமைப்பாளர் மதனவாசன்

பேரம்பேசும் சக்தியாக இல்லாமல் ஆட்சியில் பங்களராக தமிழர்கள் இருக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் கிளி அமைப்பாளராக பொறுப்பேற்ற மதனவாசன் தமிழ்மக்களுக்கு ஆலோசனை. இளையோர் தங்களுடைய எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். எதிர்ப்பு அரசியல் மட்டுமே எமது அரசியல் என்பதை கைவிட்டு இணக்க அரசியலில் இணைய வேண்டும் என்று மேலும் கூறினார். ப. மதனவாசன் அண்மையில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதம அமைப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.

புலிகளை அழித்ததால் நழுவிய மகிந்த ராஜபக்சவின் நோபல் பரிசு கனவு – மகன் நாமல் கவலை !

புலிகளை அழித்ததால் நழுவிய மகிந்த ராஜபக்சவின் நோபல் பரிசு கனவு – மகன் நாமல் கவலை !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தால் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார், ஆனால் அவர் செய்ய வேண்டியதைச் செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். .

“விடுதலைப் புலிகளை நசுக்கியதற்காக நாமும் எங்கள் பரம்பரையும் கூட கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்ற உண்மையை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அறிந்திருந்தோம். எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் நாங்கள் எமது அரசியலைத் தொடர்வோம் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மூன்றில் ஒன்றாக குறைக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் – அனுர தரப்பு மீது பலரும் காட்டம் !

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பில் மூன்றில் இரண்டு பங்கு நீக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ளமுடியாத செயற்பாடு என சட்டத்தரணி மனோஜ் கமகே கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(31.10.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு  ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு இந்த அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என கமகே தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக 2 ஜீப் வண்டிகள், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டி என்பன வழங்கப்பட்டுள்ளன.

சிலரது விருப்பத்தினால் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக மனோஜ் கமகே கூறியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சரவை முடிவுகளை மாற்றுவது சட்டவிரோதமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி முறையான பாதுகாப்பு மதிப்பீட்டின் ஊடாக 2020 மார்ச் 19 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் எனவும் கமகே தெரிவித்துள்ளார்.