இணக்க அரசியல் சாபக்கேடு இல்லை என்கிறார் மகிந்தவின் கிளி அமைப்பாளர் மதனவாசன்
பேரம்பேசும் சக்தியாக இல்லாமல் ஆட்சியில் பங்களராக தமிழர்கள் இருக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் கிளி அமைப்பாளராக பொறுப்பேற்ற மதனவாசன் தமிழ்மக்களுக்கு ஆலோசனை. இளையோர் தங்களுடைய எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். எதிர்ப்பு அரசியல் மட்டுமே எமது அரசியல் என்பதை கைவிட்டு இணக்க அரசியலில் இணைய வேண்டும் என்று மேலும் கூறினார். ப. மதனவாசன் அண்மையில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதம அமைப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.


