அநுரவுக்கு ரெட் அலேர்ட் ( red Alert ) கொடுங்கள் சஜித் கோரிக்கை!

அநுரவுக்கு ரெட் அலேர்ட் ( red Alert ) கொடுங்கள் சஜித் கோரிக்கை!

அநுரவுக்கு ரெட் அலேர்ட் ( red Alert ) கொடுங்கள் சஜித் கோரிக்கை!

அநுரவுக்கு ரெட் அலேர்ட் ( red Alert ) கொடுங்கள் சஜித் கோரிக்கை!

உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து அநுர அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கும் படி தலவாக்கலையில் நேற்று நடைபெற்ற மேதின கூட்டத்தில் சஜித் பிரேமதாஸ அறை கூவல் விடுத்துள்ளார். தற்பொழுது மின்சாரக் கட்டணத்தை குறைத்துள்ள அநுர அரசு தேர்தல் முடிய மின்சார கட்டணத்தை அதிகப்படுத்தவுள்ளதாக தமக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது எனவும் சஜித் தெரிவித்துள்ளார். மக்களுக்கு உப்பைக் கூட பெற்றுக் கொடுக்க முடியாத மக்களை ஏமாற்றும் காட்டாட்சி நடத்தும் அநுர அரசுக்கு பாடம் கற்பிக்க ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கும்படி கோரினார். தலவாக்கலையில் நடந்தது மேதின கூட்டமா? அல்லது உள்ளூராட்சித் தேர்தல் பிரச்சாரக் கூட்டமா ? என மக்கள் முழித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.