அதானி குழுமம்

அதானி குழுமம்

அதானி குழுமம் மட்டுமல்ல இந்தியாவும் இலங்கையை கைவிட்டது என்கிறார் ரணில் – புலம்பெயர் தமிழர்களை முதலிட அழைக்கிறது அனுர அரசு !

அதானி குழுமம் மட்டுமல்ல இந்தியாவும் இலங்கையை கைவிட்டது என்கிறார் ரணில் – புலம்பெயர் தமிழர்களை முதலிட அழைக்கிறது அனுர அரசு !

 

அதானி இலங்கையில் காற்றாலை மின் திட்டங்களை கைவிட்டதன் மூலம் இந்தியா இலங்கையை கைவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதானி குழுமம் வெளியேற்றத்தால் எதிர்காலத்தில் இலங்கை சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் அதானி நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் 484 மெகாவாட் திறனுடைய காற்றாலை மின் உற்பத்தி திட்டம் நாட்டின் பசுமை ஆற்றல் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கும் எனவும், அதே நேரத்தில், சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். மேலும், இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கு இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் பா.உ இராமலிங்கம் சந்திரசேகர் தெரவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமம் காற்றாலை மின் திட்டத்திலிருந்து வெளியேறியது ! அனுரவின் கிளீன் சிறிலங்காவின் எதிரொலியா?

அதானி குழுமம் காற்றாலை மின் திட்டத்திலிருந்து வெளியேறியது ! அனுரவின் கிளீன் சிறிலங்காவின் எதிரொலியா?

 

இலங்கையில் திட்டமிடப்பட்ட 1 பில்லியன் டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து அதானி கிரீன் எனர்ஜி விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் குறித்து அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தற்போது இலங்கை முதலீட்டு சபைக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான பெரும்பாலான அனுமதிகளைப் பெற்ற போதிலும், தீர்க்கப்படாத சுற்றுச்சூழல் அனுமதிகள் மற்றும் உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு தாமதங்களைக் காரணம் காட்டி, இன்றுவரை இந்தத் திட்டத்தைச் செயற்படுத்த முடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இது ஒரு “மரியாதைக்குரிய விலகல்” என்றும், இலங்கையில் எதிர்கால திட்டங்களுக்கு தங்கள் நிறுவனம் திறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு புதிய குழு நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்ய உள்ளதாகவும், அதானி குழுமம் மற்றும் இலங்கை அதிகாரிகளின் அதிகாரபூர்வ அறிக்கைகள் இன்னும் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதானி முழுமத்தின் திட்டங்கள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் சமூக மட்டங்களில் எழுந்திருந்தன. கடந்த 2022ம் ஆண்டு கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது மன்னாரில் தொடங்கப்பட இருந்த காற்றாலை திட்டம், எந்த விதமான போட்டியாளரும் இன்றி அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்த ரணில் விக்ரமசிங்கே அரசும் அந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை முன்னெடுத்தது.

இதனிடையே, இலங்கையின் எரிசக்தி துறைக்குள் அதானி நிறுவனம் பின்வாசல் வழியாக நுழைந்து விட்டது என்று அன்றைய எதிர்த்கட்சிகள் குற்றஞ்சாடின. அதேபோல் மன்னார் பகுதிவாசிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள், முக்கியமான பறவைகள் சரணாலயம் உயிர்பல்வகைமைக்கான பாதிப்பு மற்றும் பிற சுற்றுச்சூழல் இடர்பாடுகளை சுட்டிக்காட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தன.

2024 அக்டோபரில், புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கம் காற்றாலை மின் திட்டத்திற்கு அதானி கிரீன் எனர்ஜிக்கு வழங்கப்பட்ட ஒப்புதல்களை மறுபரிசீலனை செய்யும் என்று அட்டர்னி ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த முடிவு அக்டோபர் 7, 2024 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது. நவம்பர் 14 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட பிறகு ஒரு முடிவு எடுக்கப்படும் என்று சுட்டிக்காட்டி, அரசாங்கம் தனது நிலைப்பாட்டை இறுதி செய்ய கூடுதல் அவகாசம் கோரியது.

கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் அதானி குழுமம் மீது முன்வைக்கப்ப்பட்ட ஊழல் குற்றச்சாட்டையடுத்து அனுர அரசு ஜனவரியில் மன்னார் மற்றும் பூநகரியில் அதானி குழுமத்தின் காற்றாலை மின்சார திட்டத்திற்கான விலைக் குறித்த ஒப்பந்தத்தை ரத்து செய்து மீளாய்வு செய்ய குழுவொன்றை அமைத்தது. இந்தப் பின்னணியிலேயே அதானி குழுமம் குறித்த திட்டத்திலிருந்து பின்வாங்கியுள்ளது

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய மேம்பாட்டு கடன் ஒப்பந்தம் – விலகியது அதானி குழுமம்!

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்காவுடனான 553 மில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் இருந்து அதானி குழுமம் விலகியுள்ளது.

அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி மீது அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்த பின்னணியில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அந்த நிறுவனம் விலகியுள்ளது.

இருப்பினும், மேற்கு முனையத்தின் அபிவிருத்தியை அதானி குழுமம் அதன் உள் மூலதன கையிருப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளவுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்காக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனம் எதிர்பார்த்திருந்த 553 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தம் கைவிடப்பட்டுள்ளதாக அதானி துறைமுகங்கள் மற்றும் விசேட பொருளாதார வலய நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதானி குழுமம் தனது உள் மூலதன இருப்புக்களை கொழும்பு மேற்கு சர்வதேச முனைய திட்டத்திற்கு பயன்படுத்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக நிறுவப்பட்ட நிறுவனத்தின் பெரும்பங்கு அதானி குழுமத்திற்கு சொந்தமானது.

இந்த திட்டத்திற்கு நிதியுதவி அளிக்க அமெரிக்கா கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்தது. ஆனால் அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி மீது அமெரிக்க அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ததால், அதற்கான நிதி உதவி பெறுவதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது.

இத்தகைய பின்னணியில், உரிய கடன் ஒப்பந்தத்தில் இருந்து அதானி குழுமம் விலகியுள்ளது.