இலங்கை நிலைவரம் தொடர்பாக இந்திய வெளியுறவு செயலாளர் சிவ்சங்கர் மேனனுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு அடுத்த வாரம் புதுடில்லிக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் தற்போதைய சூழ்நிலையில் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதில்லையென கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இந்த அழைப்புத் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூடி ஆராய்ந்தது. கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ்நாடு சென்றிருப்பதால் பாராளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியாவின் அழைப்பை ஏற்றுக்கொள்வதில்லையென்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.